மேலும் அறிய

The Lancet Commission Report : மாசுபாடுகளால் 2019-ஆம் ஆண்டு மட்டும் 90 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சித் தகவல்..

மாசுபாடு காரணமாக 2019-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாசுபாடு காரணமாக 2019ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

The Lancet Commission மாசுபாடு காரணமாக உயிரிழந்தோர் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் போர், தீவிரவாதம், மலேரியா, எயிட்ஸ், டிபி, போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களை விட மாசுபாடுகாரணமாக உயிரிழந்தவர்கள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களால் உருவாக்கப்படும் மாசுபாடு நிறைந்த காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உடனடியாக இறப்பது அரிது தான் என்றாலும், இருதய நோய், கேன்சர், சுவாசப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தீவிர நோய்களால் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


The Lancet Commission Report : மாசுபாடுகளால் 2019-ஆம் ஆண்டு மட்டும் 90 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சித் தகவல்..

கடந்த 2019ல் மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களில் சுமார் 67 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழந்தவர்கள் என்றும், காற்று மாசு பெரும்பாலும் நிலக்கரியை எரிப்பதாலும், பெட்ரோலிய பொருட்களை எடுப்பதாலும் தான் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் ஃபுல்லர், சுத்தமான மற்றும் பசுமையான புறவெளியை நம்மால் உருவாக்க முடியவில்லை என்றால் நாம் மோசமான தவறை செய்கிறோம் என்று அர்த்தம் என்று தெரிவித்துள்ளார். வேதியியல் மாசுபாடுகூட சுற்றுப்புற சூழலை பாதிக்கும் அளவிற்கு உலக அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று கூறியுள்ளார். 


The Lancet Commission Report : மாசுபாடுகளால் 2019-ஆம் ஆண்டு மட்டும் 90 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சித் தகவல்..

முன்கூட்டியே உயிரிழந்தவர்களில் 6 பேரில் ஒருவர் அல்லது 90 லட்சம் பேர் மாசுபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையானது கடந்த 2015 முதல் அப்படியே தொடர்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, முன் கூட்டியே உயிரிழப்பு ஏற்படுவதற்கான காரனங்களாக தொழிற்சாலைமயமாக்கல், சுற்றுப்புற காற்று, வேதியியல் மாசுபாடு ஆகியவை குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உயர்ந்து வருவதாக எச்சரித்துள்ளது.

சுற்றுப்புற காற்று மாசுபாடு காரணமாக மட்டும் 2019ம் ஆண்டில் 45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2015ல் உயிரிழந்தவர்களை விட இந்த எண்ணிக்கை 3 லட்சம் அதிகம் என்றும் இந்த இறப்பு விகிதமானது 2000வது ஆண்டில் 29 லட்சமாக இருந்தது அடுத்த 20 ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதையும், சுற்றுப்புறச்சூழல் தீவிரமாக மோசமடைந்து வருகிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


The Lancet Commission Report : மாசுபாடுகளால் 2019-ஆம் ஆண்டு மட்டும் 90 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சித் தகவல்..

காற்று மாசுபாடு உயர்ந்து வரும் அதே வேளையில் வேதியியல் மாசுபாடும் உயர்ந்து வருகிறது என்று எச்சரித்துள்ள அந்த அறிக்கை, இதன் காரணமாக 9 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது. 

மாசுபாடுகளால் ஏழை நாடுகளில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகும், இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும், இருதய நோய்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஃபுல்லர் தெரிவித்துள்ளார். இந்த முன்கூட்டிய இறப்புகளால் உலகம் முழுவதும் 4.6 ட்ரில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது உலகப் பொருளாதாரத்தில் 6 சதவீதம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget