மேலும் அறிய

Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?

கடந்த மூன்று தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் ஏழு உயரமான கட்டிடங்களில் திடீரென தீப்பிடித்தது.

ஹாங்காங் நாட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரின் போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மூன்று தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் ஏழு உயரமான கட்டிடங்களில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கிய குடியிருப்பு வாசிகளில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 300 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 26ம் தேதி தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுத்தடுத்து அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தொகுப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிடித்த 32 அடுக்குமாடி குடியிருப்பு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த கட்டடத்தின் வெளிப்புறம் மூங்கில் கட்டைகளால் சாரம் கட்டப்பட்டு வேலை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் திடீரென இந்த மூங்கில் கட்டைகளில் தீப்பிடித்து எரிந்தது. மொத்தமாக 8 குடியிருப்புகள் இருக்கும் அந்த வளாகத்தில் தீ அடுத்தடுத்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏழு கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. கட்டுமான வலைகளில் எழுந்த தீ மற்றும் பலத்த காற்றினால் எழுந்த தீப்பொறிகள் ஆகியவை மிக மோசமான விபத்தாக மாறியது. 

உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரண்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரே நேரத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்பிலும் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் பலர் வயதானவர்கள், நோயாளிகள் என்பதால் மீட்பு பணி கடும் சிரமத்திற்கு உள்ளே நடைபெற்றது. 900 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர், 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் அவசர அவசரமாக நடைபெற்றது. 

இதனிடையே காணாமல் போன குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஒரு பிரத்யேக விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு இதே  நவம்பரில் ஹாங்காங்கில் ​​கவுலூனில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் எரிந்த  தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதுவே அங்கு மோசமான தீ விபத்தாக இருந்தது.

45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீ விபத்து தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து மீண்டு வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget