மேலும் அறிய

Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?

கடந்த மூன்று தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் ஏழு உயரமான கட்டிடங்களில் திடீரென தீப்பிடித்தது.

ஹாங்காங் நாட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரின் போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மூன்று தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் ஏழு உயரமான கட்டிடங்களில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கிய குடியிருப்பு வாசிகளில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 300 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 26ம் தேதி தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுத்தடுத்து அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தொகுப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிடித்த 32 அடுக்குமாடி குடியிருப்பு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த கட்டடத்தின் வெளிப்புறம் மூங்கில் கட்டைகளால் சாரம் கட்டப்பட்டு வேலை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் திடீரென இந்த மூங்கில் கட்டைகளில் தீப்பிடித்து எரிந்தது. மொத்தமாக 8 குடியிருப்புகள் இருக்கும் அந்த வளாகத்தில் தீ அடுத்தடுத்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏழு கட்டிடங்களுக்கு வேகமாக பரவியது. கட்டுமான வலைகளில் எழுந்த தீ மற்றும் பலத்த காற்றினால் எழுந்த தீப்பொறிகள் ஆகியவை மிக மோசமான விபத்தாக மாறியது. 

உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரண்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரே நேரத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்பிலும் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு தங்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் பலர் வயதானவர்கள், நோயாளிகள் என்பதால் மீட்பு பணி கடும் சிரமத்திற்கு உள்ளே நடைபெற்றது. 900 பேர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர், 140 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு மீட்பு பணிகள் அவசர அவசரமாக நடைபெற்றது. 

இதனிடையே காணாமல் போன குடியிருப்பாளர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஒரு பிரத்யேக விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு இதே  நவம்பரில் ஹாங்காங்கில் ​​கவுலூனில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் எரிந்த  தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதுவே அங்கு மோசமான தீ விபத்தாக இருந்தது.

45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீ விபத்து தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து மீண்டு வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Russia Vs Europe: “நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
“நாங்க இப்போவே ரெடி, போருக்கு வர்றீங்களா.? ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின் - என்ன நடந்தது.?
Trump Vs Joe Biden: “செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
“செல்லாது, செல்லாது..“ ஜோ பைடன் கையெழுத்திட்ட ஆவணங்களை நிறுத்தி வைத்த ட்ரம்ப்; அப்போ குடியுரிமை.?!
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
அடி தூள்.. தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு- அசத்தும் வேளாண்மை துறை
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Embed widget