மேலும் அறிய

சூடானில் மோதல்..21 பேர் உயிரிழப்பு..! போப் வருகைக்கு முன்னால் நடந்த பயங்கரம்

தெற்கு சூடானில் மேய்ச்சல் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். போப் பிரான்சிஸ் சூடானுக்கு வருகை தரும் சூழலில் நடந்த இந்த மோதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடானில் மேய்ச்சல் குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். போப் பிரான்சிஸ் சூடானுக்கு வருகை தரும் சூழலில் நடந்த இந்த மோதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 பேர் உயிரிழப்பு

தெற்கு சூடானில் பிரதானமாக கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். அங்கு மேய்ச்சல் தொழில் தான் பிரதானமாக இருக்கிறது. பல்வேறு மேய்ச்சல் குழுக்கள் இருக்கின்றன. அவ்வப்போது இந்தக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் அந்த மோதல்கள் எல்லாமே உயிர்ப்பலியில் தான் முடியும். அவ்வாறே வியாழக்கிழமை தெற்கு சூடானில் ஏற்பட்ட மோதலும் 21உயிர்களைப் பலி வாங்கி முடிந்துள்ளது.

தெற்கு சூடான் நாடு, 2011-ல் சூடானில் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே உள்நாட்டுப் போர் ஆரம்பித்து, அதில் 3.8 லட்சம் மக்கள் பலியாகினர். ஒரு வழியாக உள்நாட்டுப் போர் 2018-ல் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆயுதம் ஏந்திய உள்நாட்டு போராளிகள் மற்றும் போட்டி இனக்குழுக்களால் நடத்தப்படும் வன்முறையால் நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மத்திய ஈக்வடோரியாவின் காஜோ-கேஜி கவுண்டியில் உள்ள, கால்நடை முகாம் மீது ஆயுதமேந்திய மேய்ப்பர்கள் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மாவட்ட ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த தாக்குதலுக்கு கவுண்டி ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும்படி போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். அத்துடன், கேன்டர்பரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து தேவாலய பொதுச்சபை நடுவர் ஆகியோருடன் போப் பிரான்சிஸ் இன்று தெற்கு சூடானில் அமைதி யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மன்றாடிய போப் பிரான்சிஸ்:

தெற்கு சூடானில் தொடர்ச்சியாக அமைதியை நிலைநாட்டும் முயற்சியைப் போப் எடுத்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போப்பின் அமைதி முயற்சி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆம் போப் பிரான்சிஸ் மரபுக்கு மாறாக, சூடானின்  சர்ச்சைக் குழுக்களின் தலைவர்களையும் மற்றும் 3 துணை அதிபர்களையும் வாடிகன் வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். "நான் உங்களின் சகோதரனாக கேட்க விரும்புவது அமைதியை நிலைநாட்டுங்கள். எனது இதயத்தில் இருந்து இந்த கோரிக்கையைவிடுக்கிறேன். முன்னேறிச் செல்லும் வழியை பாருங்கள். உங்கள் பிரச்சினைகளை சரி செய்யுங்கள்" இவ்வாறு கூறிய போப் பிரான்சிஸ், அந்த தலைவர்களின் காலில் விழுந்து மன்றாடியதோடு, அவர்கள் கால்களில் முத்தமிட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை சூடானில் இனவாத குழுக்களுக்கு இடையேயான மோதல் அதுவும் கொலைவெறித் தாக்குதல்கள் முடிந்தபாடில்லை. இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget