விழுப்புரத்தில் பரபரப்பு... ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
சாராயம் கடத்தி செல்கிறார்களா என சோதனை செய்தபோது நான்கு பேரிடமிருந்து ஹவாலா பணம் பறிமுதல்.

விழுப்புரம்: சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரொக்க பணத்தை பேக்கில் எடுத்து சென்ற நான்கு பேரை விழுப்புரம் தாலுக்கா போலீசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் சுதாகர், முருகவேல் ஆகிய இருவரும் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மது பாட்டில்கள் சாராயம் உள்ளிட்டவற்றை கடத்தி வருகிறார்களா என வழக்கம்போல் இருசக்கர வாகனம் பேக்குகள் அட்டைப்பெட்டியில் என சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நான்கு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக பேக் மாட்டிக்கொண்டு நடந்து சென்றுள்ளனர். அவர்கள் நான்கு பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அழைத்து விசாரனை செய்தனர்.
அப்போது விசாரனையில் நான்கு பேரும் சென்னையிலிருந்து ரயில் மூலமாக ஹாவாலா பணம் ஒரு கோடியே 60 லட்சம் பணம் எடுத்து வந்ததும் அதனை திருச்சிக்கு விழுப்புரத்தில் ரயிலில் இருந்து இறங்கி பேருந்து மூலமாக திருச்சி எடுத்து செல்ல பேருந்து நிலையத்திற்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நான்கு பேரையும் தாலுக்கா காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரனை செய்தபோது திருச்சி வரகனேரி பகுதியை சார்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், அபுபக்கர் சித்திக், ராஜ்முகமது, ஆகிய நான்கு பேர் என்றும் இவர்கள் குருவியாக செயல்பட்டதும் சென்னை பிராட்வே பகுதியில் பணத்தை பெற்று வந்தது விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த யாருக்காக கொண்டுவரபட்டது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
ஹவாலா
ஹவாலா, பரிமாற்றம் அல்லது நம்பிக்கைக்கான அரபு வார்த்தையிலிருந்து உருவானது, எந்தவொரு பணமும் உடல் ரீதியாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகராமல் பணத்தை மாற்றும் முறைசாரா முறையாகும். இது பொதுவாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் மேற்கத்திய உலகில் பொதுவான பாரம்பரிய வங்கி அமைப்புகளுக்கு வெளியே ஹவாலாடர்கள் எனப்படும் பணக் கடன் வழங்குபவர்களின் அமைப்பை அடிப்படையாக கொண்டது.
ஹவாலா மற்றும் பணமோசடி
ஹவாலா பெரும்பாலும் நிலத்தடி வங்கியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது மற்றும் பணமோசடி செய்பவர்களாலும் பயங்கரவாதிகளாலும் புவியியல் எல்லைகள் வழியாக உலகளவில் நிதியை மாற்றுவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்று, வங்கி முறையின் மூலம் அவை வழிநடத்தப்படாததால் மற்றும் உத்தியோகபூர்வ அமைப்புகளால் அரசாங்க ஒழுங்குமுறைக்கு முகம் கொடுக்காததால், அமைப்பில் அதிகாரத்துவம் இல்லாததால், பணமோசடிக்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தான் .
இது பணப் பரிமாற்றங்களில் பெயர் தெரியாத தன்மையை வழங்குகிறது, ஏனெனில் பணப் பரிமாற்றத்தின் மூலத்தைக் கண்டறிய முடியாது, மேலும் எழுத்துப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

