மேலும் அறிய

Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து அசுத்தத்தின் அடையாளமாகவும், சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாக மாறியுள்ள விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் 

விழுப்புரம்: ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து அசுத்தத்தின் அடையாளமாகவும், சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாக மாறியுள்ள விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை கண்டுக்கொள்ளாத நகராட்சி மற்றும் காவல்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலையத்தை கண்டுகாணாமல் இருக்கிறது. இதனால் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து அசுத்தத்தின் அடையாளமாகவும், சமூக விரோத செயலுக்கு உகந்த இடமாகவும் திகழ்கிறது. 


Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

அசுத்தமான நிலையில் பேருந்து நிலையம் 

இப்பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்து கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவோர் மூக்கை பிடித்தவாறே கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்குள்ள கடைகள் அனைத்து பயணிகள் நடந்து செல்லும் பாதசாலை, பயணிகள் காத்திருக்கும் இடம் என அனைத்தும் ஆக்கிரமித்து தேநீர் கடைகள், பழ கடைகள் என பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அங்கு உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயங்கும் அலுவலகம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாத அளவிற்கு குப்பைகள், தேவையற்ற பொருட்களை சேமிக்கும் இடமாக மாற்றியுள்ளனர் கடைக்காரர்கள். 


Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

குற்ற சம்பவங்கள்

மேலும் பேருந்து நிலையத்தில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட  பல்வேறு குற்றச் சம்பவங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழுப்புரத்தை கடந்து செல்லும் பயணிகள் கடும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பற்ற நிலையால் பெண்கள் ஒரு வித இருக்கமான மன நிலையில் விழுப்புரம் பேருந்து நிலையத்தை கடந்து வருவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரத்தில் வரும் பயணிகள் பெண்களிடம் வழிப்பறி மற்றும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சுகாதாரத்தில் நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பில் காவல்துறையும் மிக அலட்சிய போக்குடன் நடந்துக்கொள்வது பொதுமக்களிடம் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .


Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

உயிர்பலி வாங்கிய வாகனகள் 

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையால் பறிமுதல் செயல்படும் விபத்துக்குள்ளான பேருந்துகள், கார்கள் ஆகியவைகளை பேருந்து நிலைய வாயிலில் நிற்க வைத்துள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த அச்சமடைகின்றனர். உயிர்களை பலி வாங்கிய வாகனங்களை பார்க்கும் போது அச்சமாக உள்ளதாகவும், பொது இடத்தில் அவற்றை நிறுத்தி வைத்திருப்பது தவறான செயலாகவும்,  மணல் லாரிகள், டாடா ஏசி,  சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம். நாள் தோறும் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த மிகப்பெரிய பேருந்து நிலையம் மக்களுக்கானதாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.


Villupuram: முகம் சுளிக்க வைக்கும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்... கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget