Breaking News LIVE 18th NOV 2024: லாட்டரி மார்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12 கோடி பறிமுதல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Background
Breaking News LIVE 18th NOV 2024: இன்று இரவு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று இரவு இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரைக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Breaking News LIVE 18th NOV 2024: லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12 கோடி பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்பான இடங்களில் ரூ. 12.41 கோடி, அமலாக்கத் துறையால் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Breaking News LIVE: சென்னை - 8 சர்வதேச விமானங்கள் ரத்து - லிஸ்ட் இதோ - காரணம் என்ன?
சென்னையில் இன்று ஒரேநாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி இன்று ஒரே நாளில் 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர், இலங்கை, டாக்கா செல்லும் 4 விமானங்கள், மறு மார்க்கத்தில் சென்னை வரும் 4 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிர்வாக காரணங்களால் 8 சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Breaking News LIVE : உதகையில் வீடு கட்டித் தருவதாக மோசடி செய்தவர் கைது
உதகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி ரூ. 1 கோடி மோசடி செய்த புகாரில் சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியாகநகரில் உள்ள சங்கரலிங்கம் என்பவரது கட்டுமான நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உதகையில் 8 மாதத்துக்குள் குடியிருப்பு கட்டித் தருவதாக கூறி விளம்பரம் வெளியிட்டுள்ளார் சங்கரலிங்கம். விளம்பரத்தை நம்பி இக்னேஸிஸ் தாமஸ் என்பவர் 6 பிளாட்டுகள் வாங்குவதற்கு ரூ.1.45 கோடியை தந்துள்ளார்.
8 மாதத்தில் குடியிருப்பு கட்டித் தராமலும் பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றியதாக சங்கரலிங்கம் மீது புகார் அளித்துள்ளார். இக்னோஸிஸ் தாமஸ் அளித்த புகாரின் பேரில் சங்கரலிங்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழப்பு - பெரும் அதிர்ச்சி
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலிசா போட்டிக்காக குவாலியர் சென்று சென்னை திரும்பியபோது சென்னையில் உயிரிழந்தார். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

