![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்
ஆரோவில் பகுதியில் வெளிநாட்டவர் அதிகமாக வசித்து வரும் நிலையில் தந்திராயன் குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளிக்கும் போது அலையல் சிக்கி இறந்திருக்கலாம்.
![மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம் Villupuram Dead body of a foreigner washed ashore at Anumanthai beach near Marakkanam TNN மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/10/9a363068c21a12c18ff90dd9bdbcc8191694358443613113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: மரக்காணம் அருகே அனுமந்தை கடற்கரையில் வெளிநாட்டவர் உடல் கரை ஒதுங்கியது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை மீனவ குப்பத்தில் கடற்கரையோரம் அரைக்கால் டவுசருடன் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவரின் உடல் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் கடற்கரையிலிருந்து மீனவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மரக்காணம் போலீசாருக்கும் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வரை விரைந்து வந்த மரக்காணம் போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்று தெரியாத நிலையில் அவர் குறித்து விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆரோவில் பகுதியில் வெளிநாட்டவர் அதிகமாக வசித்து வரும் நிலையில் தந்திராயன் குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளிக்கும் போது அலையல் சிக்கி இறந்திருக்கலாம் எனவும், அல்லது புதுச்சேரி பகுதியில் யாரேனும் கடல் அலை சிக்கி இருக்கலாம் அவ்வாறு சிக்கிய உடல் கடல் அலையின் திசைக்கேற்ப மரக்காணம் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவர்கள் கூறுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)