மேலும் அறிய

150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா

’’நேற்று மக்கள் குறைவாகவே வந்த நிலையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை பார்த்தனர், அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்’’

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி 151வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று அதிகாலை யுடன் நிறைவுபெற்றது பக்தர்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். ஆண்டுதோறும்  ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.


150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா

அதன்படி 151-வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சத்திய ஞானசபையில் நேற்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.

தொடர்ந்து நேற்று காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதன்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்த  தரிசனத்துடன்  ஜோதி தரிசனம் முடிவடைந்தது முன்னதாக நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.  ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் காண்பிக்கபட்டது.


150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா

கொரோனா  ஊரடங்கு விதிமுறையின் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மேலும் வள்ளலார் சபை வளாகத்தில் அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என  எதற்கும் அனுமதி இல்லை மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் வீட்டிலிருந்தபடி நேரடியாக காண வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரடியாக பார்க்கலாம் என்றும் மேலும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஜோதி தரிசனத்தை பார்க்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.


150 ஆண்டுகளில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடந்த வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா

ஆனால் நேற்று மக்கள் குறைவாகவே வந்த நிலையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை பார்த்தனர், அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை காவல் துறையினர் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை கோயிலுக்கு வெளியே இருந்து தான் தரிசனத்தை பார்த்தனர். 151 ஆண்டில்  முதன்முறையாக பக்தர்கள்யின்றி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டதுவள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பத்தில் நாளை  மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.