மேலும் அறிய

சிதம்பரம் அருகே ஒரே கடையில் 2வது முறையாக மது பாட்டில்கள் திருட்டு

ஒரே கடையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு 9000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்டது. ஒரே கடையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேளக்குடி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் பணி செய்யும் மேற்பார்வையாளர் பால்ராஜ் நேற்று இரவு 10 மணிக்கு எப்போதும் போல் டாஸ்மாக் கடையை பூட்டி சென்ற நிலையில் இன்று நன்பகல் 12:00 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்க வந்தபோது கடையின் சுவர் துளையிட்டு மது பாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து மேற்பார்வையாளர் பால்ராஜ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 9000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இதே டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட்டு மது பாட்டில்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை ஒரே டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

கல்லூரியில் படிக்கும் போலீசாரின் மகளை கடத்திச் சென்ற காவலர்-காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரால பரபரப்பு.

கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்  காவலர் ஒருவர் பணிபரிந்து  வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் புதுநகர் போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவரது மகளான 19 வயதுடைய மாணவி, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

 நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மாணவியை, அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் கடலூர் வில்வநகரை சேர்ந்த வேல்முருகன் (32) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெண் போலீஸ், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளை காவலர் வேல்முருகன் கடத்தி சென்று விட்டதாகவும், அவருக்கு உடந்தையாக அவரது தங்கை உள்ளிட்ட 3 பேர் இருந்ததாகவும் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெண் போலீசின் மகளை, போலீஸ்காரர் கடத்தி சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி ஆரோவில் மாடல்... வியந்து பாராட்டிய மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி!
நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி ஆரோவில் மாடல்... வியந்து பாராட்டிய மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
புதுச்சேரி பெற்றோர்களே அலர்ட்! ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை வீடு தேடி வரும் ஓஆர்எஸ், துத்தநாக மாத்திரைகள்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!
விழுப்புரத்திற்கு டபுள் ட்ரீட்! ரூ.42 கோடியில் புதுப்பிக்கும் வீடூர் அணை... தயார் நிலையில் பிரம்மாண்ட வேளாண் மையம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget