மேலும் அறிய

இது தேசிய பிரச்சினை... அன்புமணி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் - திருமாவளவன்

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில பிரச்சனையாக பார்க்காமல் தேசிய பிரச்சனையாக பார்த்து பாமக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் - திருமாவளவன்

விழுப்புரம் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்பட்டால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவே இதனை அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு கையாள வேண்டும்.,  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில பிரச்சனையாக பார்க்காமல் தேசிய பிரச்சனையாக பார்த்து பாமக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் பேட்டியளித்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முகாம் செயலாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்:

 

வருகின்ற மே-31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. தேசிய அளவில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், வெறுப்பு அரசியலை தவிர்க்க வேண்டும் என்பதை முன்னுறுத்தி இந்த பேரணி நடைபெறவுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. மே 18ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிறைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும். 

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை பாதுகாக்காமல் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய சங் பரிவார் அமைப்புகள் இந்தியர்களிடையே மதத்தின் பெயரால் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் இனி தொடராமல் இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் அனைவரும் மதம் கடந்து, சாதி கடந்து சகோதரர்களாய் இணைய வேண்டும். காஷ்மீர் படுகொலைக்கு அரசின் தவறான கொள்கை முடிவுகளும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு உரிமையை ரத்து செய்ததும் மிக முக்கிய காரணங்களாகும். எனவே பாஜக அரசு சகோதரத்துவத்தை பாதுகாக்க, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோர் நலன்களை பாதுகாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

ஆளுநர் அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளால் குழப்பங்கள் உருவாகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை ஏற்க ஆளுந்ற் மறுக்கிறார். இதுவரை எந்த ஆளுநரும் செய்யாத பல குளறுபடிகளை ஆட்சி நிர்வாகத்திற்கு எதிரான செயல்களை ஆளுநர் தொடர்ந்து செய்கிறார். அதனுடைய விளைவாகத்தான் துணைவேந்தர்கள் தன்னிச்சையாக புறக்கணிப்பு செய்துள்ளனர். ஆளுநரின் நிலைப்பாடு என்பது துணைவேந்தர்களுக்கு ஒரு தேவையற்ற நெருக்கடியை உருவாக்குகிறது. ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆளுநர் தன் பொறுப்பை மறந்து அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார். 

காஷ்மீர் பிரச்சனையை மத அடிப்படையில் பாஜக கையாள்கிறது. பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கான நாடு, இந்தியா இந்துக்களுக்கான நாடு என்கிற ஒரு விவாதத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் இது மிகவும் ஆபத்தான ஒரு அரசியல். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார். உலக அரங்கிலும் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்பு பாழாகும். இதனை அரசியல் ரீதியாக கையாள வேண்டும். 

 

சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்க ஏன் அன்புமணி தயங்குகிறார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. இது தேசிய அளவிலான பிரச்சனை. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு போன்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இதனை தேசிய பிரச்சினையாக பார்க்காமல், மாநில பிரச்சனையாக பார்க்கிறார்கள். இந்திய ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாமக பேச வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget