மேலும் அறிய

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்

கடலூர் அரசு சேவை இல்லத்திலிருந்து அரசு பள்ளிக்கு இலவச பேருந்து சேவை மனு அளித்த அடுத்த நாளே ஆக்ஷனில் இறங்கிய ஆட்சியர்.

தமிழ்நாடு சமூக நலத்துறை கீழ்  கடலூர் செம்மண்டலம் பகுதியில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அரசு சேவை இல்லத்தில் தங்கி மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
 
அரசு சேவை இல்லத்திலிருந்து மஞ்சக்குப்பம் அரசு பள்ளிகளுக்கு உரிய பேருந்து பயண வழி இல்லாததால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சமூக நலத்துறையிலிருந்து அரசு சேவை உள்ள மாணவிகள் கல்வி நிலையங்கள் சென்றுவர பேருந்து கேட்டு பல மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளித்து ஆதரவற்ற இந்த குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி வந்தனர்.

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்
 
இந்த நிலையில் கடந்த  கல்வி ஆண்டோடு இவர்களுக்கு உதவி கரம் நீட்டி வந்த அன்னை சத்யா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகத்தின் பேருந்தும் இனி முடியாது என கையை விரித்து விட மீண்டும் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவுகளையே இந்த சமூக நலத்துறை தட்டி தனது கோரிக்கையை மீண்டும் தபால் வடிவில் கொடுத்தது. இப்போது ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நாகப்பட்டினத்தில் இருந்து புதிதாக கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அருண் தம்புராஜ். குழந்தைகள் கல்வியில் மிகுந்த கவனமும், அக்கறையும் காட்டும் இவரின் கைகளுக்கு இந்த மனுக்கள் சென்ற அடுத்த நாளே போக்குவரத்து துறையின் அதிகாரிகள் சமூகநலத் துறையின் கோரிக்கையை ஏற்று பேருந்து வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகள் திறக்கப்பட்டது இந்நிலையில் தற்போது இங்கு பயிலும் சுமார் 145 மாணவிகள் அரசு சேவை இல்லத்திலிருந்து தங்கள் கல்வி பயிலும் கல்வி நிலையங்களுக்கு பிரத்யேக பேருந்தில் மகிழ்ச்சியோடு பயணம் செய்கின்றனர். 

Cuddalore: ஆதரவற்ற ஏழை மாணவிகளின் பல ஆண்டு கோரிக்கையை 10 நாளில் தீர்த்த கடலூர் கலெக்டர்
 
இதற்கான நிகழ்ச்சி கடலூர் அரசு சேவை இல்லத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்காக வழங்கப்பட்ட பிரத்தியேக பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களின்  இந்த செயலை சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவிகள் மற்றும் கடலூர் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget