மேலும் அறிய

தொடரும் அவலம்... இருளர் சமூக ஊராட்சி மன்ற தலைவி தர்ணா! நாற்காலியில் அமர வைக்காமல் அவமதிப்பு...

விழுப்புரம்: இருளர் சமூகத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் துணை ஊராட்சி மன்ற தலைவியும் அவரது கணவரும் தடுப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி தர்ணா.

விழுப்புரம் : செஞ்சி அருகேயுள்ள ஆனாங்கூர் இருளர் சமூகத்தை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் துணை ஊராட்சி மன்ற தலைவியும் அவரது கணவரும் தடுப்பதாக கூறி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவி தர்ணாவில் ஈடுபட்டார். 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆனாங்கூர் ஊராட்சியில் பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின வாக்காளர் 50 பேர் உட்பட 750 வாக்காளர்களை கொண்ட ஆனாங்கூர் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு அதே கிராமத்தை சேர்ந்த மறைந்த ஏழுமலை என்பவரின் மனைவியான சங்கீதா(40) என்பவர் தேர்தலில் போட்டியிட்டு 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக முறையாக பதவியேற்றுக்கொண்டார். ஆறு வார்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆனாங்கூர் ஊராட்சியில் சித்ரா என்பவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பழங்குடியின பெண் ஊராட்சி மன்ற தலைவரான சங்கீதாவை ஊராட்சி நிர்வாகத்தை செய்யவிடாமல் துணைத் தலைவர் சித்ரா மற்றும் அவரது கணவரும், திமுக கிளை செயலாளருமான குணசேகர் ஆகியோர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திய வந்ததாக கூறப்படுகிறது.

பெண் ஊராட்சி மன்ற தலைவர் பட்டியலினத்தை சேர்ந்த சங்கீதாவை நாற்காலியில் அமர வைக்காமல் அவமதிப்பு செய்ததாகவும், ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வந்துள்ளனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவமதிப்பு நடைபெற்ற வந்த நிலையில் நாளுக்கு நாள் இவர்களுடைய இடையூறு அதிகரித்து பொதுமக்கள் முன்னிலையில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாவை அவமரியாதையாகவும் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி அசிங்கப்படுத்தியதாக பெண் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரான சங்கீதா மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சங்கீதா கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து சாதிய வன்கொடுமையில் ஈடுபடும் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் அவரது கனவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒருமணி நேரத்திற்கு மேலாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராடாத்தை கைவிட்டார். இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் போராட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Samantha Divorce Controversy : ‘’சமந்தாவை வைத்து டீல் !’’காங். அமைச்சர் சர்ச்சை பேச்சுBJP Cadre issue : ”மன்னிப்பு கேட்டுட்டு போ” பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை? சுற்றிவளைத்த மக்கள்Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
”அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து கட்சியிலும் மாற்றமா?” கலக்கத்தில் திமுக மா.செ.க்கள்..!
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
Fact Check: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: பதுங்கு குழியில் ஒளிந்தாரா இஸ்ரேல் பிரதமர்? உண்மை என்ன?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Breaking News LIVE OCT 3: சென்னை மெரினா கடற்கரையில் நடக்க விமான சாகச நிகழ்ச்சி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Breaking News LIVE OCT 3: சென்னை மெரினா கடற்கரையில் நடக்க விமான சாகச நிகழ்ச்சி: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Watch Video: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! 38 வயதில் முரட்டு சதம் அடித்த மார்ட்டின் கப்தில் - பேட்டிங்கை பாருங்க
Watch Video: ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! 38 வயதில் முரட்டு சதம் அடித்த மார்ட்டின் கப்தில் - பேட்டிங்கை பாருங்க
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Virat Kohli: வந்தாலே ரெக்கார்ட்தான்! சச்சினின் சாதனையில் மீண்டும் இணைந்த விராட் கோலி - இந்த முறை என்ன?
Embed widget