மேலும் அறிய

Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?

Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பின்போது, பேசியது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Manmohan Singh: மன்மோகன் சிங் தான் பலவீனமான பிரதமர் இல்லை என, 2014ம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திட்ட சிறந்த பிரதமர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அதேநேரம், பொம்மை பிரதமர், பலவீனமான பிரதமர், சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இயங்கிய பிரதமர் என்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன. இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பில் அவரே விளக்கமளித்தார். அதில், ” தான் பலவீனமான பிரதமர் இல்லை” என விளக்கமளித்தார்.

”வரலாறு பேசும்..”

பலவீனமான பிரதமர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், "நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. தற்போது ஊடகங்களில் சொல்லப்படுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வதைக் காட்டிலும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று நான் நேர்மையாக நம்புகிறேன். அரசியல் நிரிபந்தங்களுக்கு மத்தியில் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை சரித்திரம் தீர்மானிக்க வேண்டும்" என்று பேசினார்.

தீர்க்கமாக செயல்படவில்லையா?

பல சமயங்களில் தீர்க்கமாக செயல்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.  2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகவும் பாஜகவையும் சாடினார். அதன்படி,  "அகமதாபாத் தெருக்களில் அப்பாவி குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தலைமை தாங்கி நடத்தியதை பிரதமரின் பலமாக நீங்கள் அளவிடுகிறீர்கள் என்றால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இந்த வகையான வலிமை குறைந்தபட்சம் பிரதமரிடமிருந்து இந்த நாட்டிற்கு தேவை என்று நான் நினைக்கவில்லை.  நரேந்திர மோடி பிரதமராக இருப்பது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்" என மன்மோகன் சிங் பேசினார். 

மன்மோகன் சிங் பெருமிதம்

UPA I மற்றும் UPA II இல் அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தபோது, ​​கூட்டணி ஆட்சியை நடத்தும் காங்கிரஸின் திறனைக் காட்டியதுடன், இந்த கட்சி கூட்டணியை நடத்த முடியாது என்ற எண்ணத்தை நீக்கியது. ”இந்த செயல்பாட்டில் சில சமரசங்கள் செய்யப்பட்டாலும், அவ கட்சி பிரச்னைகளே தவிர, தேசிய பிரச்சனைகளில் அல்ல" என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். மேலும், "நான் பிரதமராக இருந்த காலத்தில் எந்த ஒரு போதாமை காரணமாகவும் என்னை பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை" என்றும் மன்மோகன் சிங் விளக்கமளித்தார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget