மேலும் அறிய

Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?

Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பின்போது, பேசியது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Manmohan Singh: மன்மோகன் சிங் தான் பலவீனமான பிரதமர் இல்லை என, 2014ம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திட்ட சிறந்த பிரதமர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அதேநேரம், பொம்மை பிரதமர், பலவீனமான பிரதமர், சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இயங்கிய பிரதமர் என்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன. இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பில் அவரே விளக்கமளித்தார். அதில், ” தான் பலவீனமான பிரதமர் இல்லை” என விளக்கமளித்தார்.

”வரலாறு பேசும்..”

பலவீனமான பிரதமர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், "நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. தற்போது ஊடகங்களில் சொல்லப்படுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வதைக் காட்டிலும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று நான் நேர்மையாக நம்புகிறேன். அரசியல் நிரிபந்தங்களுக்கு மத்தியில் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை சரித்திரம் தீர்மானிக்க வேண்டும்" என்று பேசினார்.

தீர்க்கமாக செயல்படவில்லையா?

பல சமயங்களில் தீர்க்கமாக செயல்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.  2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகவும் பாஜகவையும் சாடினார். அதன்படி,  "அகமதாபாத் தெருக்களில் அப்பாவி குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தலைமை தாங்கி நடத்தியதை பிரதமரின் பலமாக நீங்கள் அளவிடுகிறீர்கள் என்றால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இந்த வகையான வலிமை குறைந்தபட்சம் பிரதமரிடமிருந்து இந்த நாட்டிற்கு தேவை என்று நான் நினைக்கவில்லை.  நரேந்திர மோடி பிரதமராக இருப்பது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்" என மன்மோகன் சிங் பேசினார். 

மன்மோகன் சிங் பெருமிதம்

UPA I மற்றும் UPA II இல் அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தபோது, ​​கூட்டணி ஆட்சியை நடத்தும் காங்கிரஸின் திறனைக் காட்டியதுடன், இந்த கட்சி கூட்டணியை நடத்த முடியாது என்ற எண்ணத்தை நீக்கியது. ”இந்த செயல்பாட்டில் சில சமரசங்கள் செய்யப்பட்டாலும், அவ கட்சி பிரச்னைகளே தவிர, தேசிய பிரச்சனைகளில் அல்ல" என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். மேலும், "நான் பிரதமராக இருந்த காலத்தில் எந்த ஒரு போதாமை காரணமாகவும் என்னை பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை" என்றும் மன்மோகன் சிங் விளக்கமளித்தார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget