மேலும் அறிய

உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

விவசாயிகள் உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 72,522 விவசாயிகள், 1,51,737 ஏக்கருக்கு பயீர் காப்பீடு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 72 எக்டர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், மணிலா, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்டோபர் மாதம் வரை 1,06,335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் 45,402 ஏக்கர் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.


உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

இந்நிலையில், இயற்கை பேரிடரின் போது, பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க, ஆண்டு தோறும் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை அறிவுறுத்தி வருகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்த 26,386 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அந்த விவசாயிகளுக்கு 50 கோடியே 80 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

இதே போன்று, இந்தாண்டு நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடந்த 15ம் தேதிக்குள் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில், 72,522 விவசாயிகள் 1,51,737 ஏக்கருக்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, தற்போது நவரை பருவத்திற்கான பயிர் காப்பீடு துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு வரும் ஜன., 17ம் தேதி வரை காலக்கெடு உள்ளது.


உளுந்துக்கு 30ம் தேதி வரை கெடு: சம்பா நெல்லுக்கு குவிந்த காப்பீடு மனுக்கள்!

உளுந்து காப்பீடு மேலும், வானிலை ஆராய்ச்சி நிலைய முன்னறிவிப்பின் படி வடகிழக்கு பருவமழை காலத்தில் மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீவிர உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாயிகள் உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களான வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை மற்றும் பசலி 1431ஆம் ஆண்டு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்ததற்கான அடங்கல் ஆகியவற்றுடன் காப்பீட்டு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.253.35 பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செலுத்தி திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget