மேலும் அறிய

மிரட்டிய மிக்ஜாம் புயல்: வெறிச்சோடிக் காணப்பட்ட ஈசிஆர் சாலை

மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

மிக்ஜாம் புயல் எதிரொலியால் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலைகள் வெறிச்சோடின.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை மட்டும் மரக்காணத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கன மழை காரணமாக மரக்காணம் மற்றும் சுற்று தொடர்ப பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரக்காணத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலை மிக்ஜாம் புயல் எதிரொலியால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்தனர். நீண்ட வருடங்களுக்கு பின்பு கிழக்கு கடற்கரை சாலை மிக்ஜாம் புயலால் வெறிச்சோடியது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது.

முக்கிய சாலைகளில் மோட்டார்கள் கொண்டு தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், பல உட்புற பகுதிகளில் மழைநீர் எளிதில் வடிவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

பொதுமக்கள் செய்யக்கூடாதவை..!

தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அநாவசியமாக வெளியே வரக்கூடாது.

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தண்ணீரில் தேள், பாம்பு போன்றவை இருக்கலாம் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

செருப்பு அணியாமல் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நடக்க வேண்டாம்.

டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதயாக இருக்க வேண்டியது அவசியம்.

செல்போன் போன்ற மின்சார சாதனங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்.

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், முதலில் சாலையில் இருக்கும் தண்ணீரில் வாகனத்தை செலுத்த முடியுமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.

வாகன ஓட்டிகள் நன்கு பாதை நன்கு தெரிந்த பகுதிகளில் மட்டும் பயணிக்கவும்.

தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியுள்ள பாதைகளில் வாகனம் ஓட்டுவதை தவிருங்கள்.

புதிய பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று அநாவசியமாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம்.

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனத்தை மெதுவாக செலுத்துவதன் மூலம், சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் அடிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாமக உட்கட்சி பூசல்.. சுற்றுப்பயணத்தை கையில் எடுத்த அன்புமணி.. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
பிளே ஆப்க்கு முன்பாக ஆர்.சி.பி அடைக்க வேண்டிய ஓட்டை என்ன ? நிபுனர்கள் கருத்து
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
IND vs ENG: ஸ்ரேயாஸ் இல்லாம போறீங்களா? மிடில் ஆர்டரில் என்ன செய்யப்போகிறது இந்தியா? ரசிகர்கள் ஆதங்கம்
Embed widget