மேலும் அறிய

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை மிதிவண்டியில் அள்ளும் அவலம் - துருஏறி வீணாகும் வாகனங்கள்

’’கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய குப்பை அள்ளும் வண்டிகள் எந்த பயனும் இன்றி அதே இடத்தில் வீணாகி வருகின்றது’’

கடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள 45 பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் மூலம் பெறப்படும் குப்பைகள் கொட்ட முறையான இடம் இல்லாத காரணத்தினால் குப்பைகளை தொடர்ந்து கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். இது தற்பொழுது கடலூர் மாநகராட்சி ஆன பிறகும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் என பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் பலமுறை கோரிக்கை வைத்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை அல்ல வாகனம் இல்லாத காரணத்தினால் மிதிவண்டியில் சென்று பல பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
 
கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பை அள்ளும் வாகனம் இல்லாத காரணத்தினால் மிதிவண்டியில் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை சாக்குமூட்டையில் கட்டிக்கொண்டு மிதிவண்டியில் வைத்துக்கொண்டு சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வாகனம் இல்லையா என கேள்வி எழுப்பிய போது வாகனம் ஏதும் தங்களுக்கு கொடுக்கப்படவில்லை எனவும், அதனால் தான் மிதிவண்டியில் வந்து எடுத்து செல்கிறோம் மன வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
 

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை மிதிவண்டியில் அள்ளும் அவலம் - துருஏறி வீணாகும் வாகனங்கள்
 
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் இருவதுக்கும் மேற்பட்ட சிறிய குப்பை அள்ளும் வண்டிகள் எந்த பயனும் இன்றி அதே இடத்தில் வீணாகி வருகின்றது, இவ்வாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு தர வேண்டிய உபகரணங்களை முறையாக அவர்களுக்கு குடுக்காமல் ஒரே இடத்தில் இருந்து இவ்வாறு வீணாக போவது பெரும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காலை கெடிலம் நதி கரையோரம் கொட்டப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் திடீரென தீ வைத்து கொளுத்தியதால், கடலூர் அண்ணா பாலத்தில் இருந்து கம்மியம்பேட்டை செல்லும் சாலையில் முழுமையாக புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் இதனால் புகையை கடந்து வந்த இரண்டு பேர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். 
 

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை மிதிவண்டியில் அள்ளும் அவலம் - துருஏறி வீணாகும் வாகனங்கள்
 
பின்னர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்த அவர்கள் தீ அணைப்பு வாகனம் வராத காரணத்தால் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீரை வைத்து தீயை அனைத்தனர், இவ்வாறு ஏற்கனவே குப்பை கொட்ட இடம் இல்லாமல் கெடிலம் ஆற்றங்கரையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி வரும் நிலையில், மேலும் இது போன்று குப்பை அல்லும் வாகனம் இல்லாமல் மிதிவண்டியில் குப்பைகளை எடுத்து செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget