மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்ற உத்தரவு அமலில் உள்ளதால் கொடியேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
![சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது Cuddalore: Chidambaram Natarajar Temple Arudra Darshan Festival started with flag hoisting without devotees சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/11/13354982c73f48a9ccf4043b83c250f7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடராஜர் கோயில் கொடியேற்றம்
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது. இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
![சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/11/06894ec57ed2c9014e2c0343e7a1d004_original.jpg)
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கூறினார் இந்நிலையில் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. நடராஜர் கோயிலுக்கு உள்ளே உள்ள கொடிமரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் பூஜைகள் செய்து கொடி ஏற்றினார். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர், மேலும் தீட்சிதர்கள் பங்கேற்றனர்.
![சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/11/afbffa0661aae3b59768f0c5cfd661c8_original.jpg)
கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் துறையினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவை கோயிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும் எனவும், திருவிழா நடைபெறும் நேரங்களில் மட்டும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது எனவும், மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமியை வழிபடலாம் எனவும் வருவாய் துறையினர் அறிவுரைகள் வழங்கி இருந்தனர் மேலும் கோட்டாட்சியர் ரவி அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டார் . ஆனால் இன்று நடந்த கொடியேற்றத் திருவிழாவில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர். காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.மேலும் கொடி ஏற்றத்தை தொடர்ந்து வருகிற 19 ஆம் தேதி தேரோட்டமும், 20 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என தீட்சிதர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை என வருவாய்த் துறையினர் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion