மேலும் அறிய

கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

’’பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது’’

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழக மக்களை கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம்  முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு மற்றும் நோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. தற்போது உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இருப்பினும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் தடுப்பூசி போடுவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 15 முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 15 - 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 600 பள்ளி சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று கடலூர் மாநகராட்சி பள்ளியில் 15 - 18 வயது மாணவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பொடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாலசு்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், இதில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் தடுப்பூசி போடப்படும். மேலும், பள்ளி சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசி போட்டு கொள்வதினால் எவ்வித பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் ஏற்படாது. அசைவம் உண்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆவர்.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

பொதுமக்கள் மற்றும் பள்ளி சிறார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செளுத்திக்கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget