மேலும் அறிய

கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

’’பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது’’

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழக மக்களை கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த வருடம்  முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு மற்றும் நோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. தற்போது உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இருப்பினும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் தடுப்பூசி போடுவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 15 முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 15 - 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 600 பள்ளி சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று கடலூர் மாநகராட்சி பள்ளியில் 15 - 18 வயது மாணவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பொடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாலசு்பிரமணியம் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், இதில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் தடுப்பூசி போடப்படும். மேலும், பள்ளி சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசி போட்டு கொள்வதினால் எவ்வித பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் ஏற்படாது. அசைவம் உண்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆவர்.


கடலூரில் 15-18 வயதிற்குட்பட்ட 1,20,600 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

பொதுமக்கள் மற்றும் பள்ளி சிறார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செளுத்திக்கொண்ட மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget