மேலும் அறிய
கடலூரில் தொடர் மழை - ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்ட உள்ள வீராணம் ஏரி
’’வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 47.5 அடியினை எட்டிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது’’

வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு வரும். இந்நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினசாி தண்ணீர் அனுப்பப்படுவதாலும், மேலும் கீழணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் முழுமையாக நிரம்பி இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது இந்நிலையில் கீழணை மற்றும் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கீழணையில் தண்ணீர் வரத்து இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. மேலும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் வீராணம் ஏாிக்கு மழைநீா் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் 45 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து நேற்று மாலை நிலவரப்படி 46 அடியை எட்டியது.

இந்த ஏரியின் பாசன வசதியால் இந்த வீராணம் ஏரியை சுற்றியுள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலமாக நீர் பாசன வசதி பெறுகிறது இதனால் இந்த ஏரியானது சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியமான பாசன நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்படும் குடிநீர் அனுப்பும் நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது அவர்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓாிரு நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.5 அடியினை எட்டிவிடும் என தெரிகிறது, இதனால் வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
Advertisement
Advertisement