கோட் அணிந்து முதல்வராக பதவியேற்றது ஏன் ? விஜயின் ஆடை வடிவமைப்பாளர் சொன்ன காரணம்
CM Vijay : ஆளுநர் முன் முதல்வராக பொறுப்பேற்றபோது சட்டசபையில் பொறுப்பேற்றபோதும் விஜய் கோட் அணிந்ததற்கு பின் ஒரு காரணம் உள்ளது

தவெக தலைவர் விஜய் நேற்று ஆளுநர் முன்னாள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க விஜய் மற்ற அரசியல்வாதிகளைப் போல் வேஷ்டி சட்டையில் வராமல் கருப்பு நிற கோட் அணிந்து வந்திருந்தார். அதேபோல் இன்று சட்டசபையில் பொறுப்பேற்கும் போதும் விஜய் அதே போல் கோட்டை அணிந்திருந்தார். முதல்வராக பதவிற்யேற்ற பின் அணிவதற்காகவே விஜய் ஸ்பெஷலாக இந்த கோட்டை தயார் செய்யச் சொல்லி வாங்கியுள்ளார் .
தமிழக சட்டமன்ற தேர்தலில் தெவக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நேற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக கருப்பையாவிற்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்த நிலையில், இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். அந்த வகையில் சட்டசபையில் அலுவல்களை தற்காலிக சபாநாயகர் ஏற்று நடத்துவதற்கு முன், அதற்குரிய உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முதலில், முதலமைச்சர் விஜய் அடுத்ததாக 9 அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் பதவியேற்பார்கள். அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். சட்டசபையில் கோட் அணிந்து பதவியேற்கும் முதல் முதலமைச்சர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது
காரணம் என்ன ?
தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்காக, முதலமைச்சர் விஜய் அவர்கள், பீஸ்ட் திரைப்படத்தில் வரும் தனது ‘வீர ராகவன்’ கதாபாத்திரத்தைப் போன்ற ஒரு உடையை வடிவமைக்குமாறு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டார். இந்த நேர்த்தியான மேட் கருப்பு நிற உடையானது, விஜய்யை ஒரு “மாற்றத்திற்கான தலைவனாக” முன்னிறுத்தும் வகையிலும், அகில இந்திய அளவில் அனைவரையும் கவரும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாஃபிர் அகமது தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















