மேலும் அறிய

வேலூர் : குடிபோதையில் தகராறு செய்தவரின் மனைவி, வன்முறையை தடுத்தபோது நடந்த விபரீதம்..

வேலூர் வேலப்பாடியில், குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஆத்திரம் தாங்காமல் வெட்டிக்கொலை செய்த மனைவி கைது

வேலூர் வேலப்பாடியில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஆத்திரம் தாங்காமல் வெட்டிகொலை செய்த பெண் கைதாகியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் வேலாப்பாடியை சேர்ந்தவர்  குமரவேல் வயது (55) என்பவர் இவர் கடந்த 2- ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார. இந்நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் மது அருந்திக்கொண்டு வெட்டியாக  ஊரை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

குமரவேலின் மனைவி கோமதி வயது (48) இவர் வேலூரில் உள்ள அரசு வங்கி  ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.அதனைத்தொடர்ந்து குமரவேல் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி மனைவியிடமும், மகள்களிடமும் சண்டை போடுவதாகவும் மனைவியை சந்தேகப்பட்டு தினமும் சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குமரவேல் சித்ரவதை செய்வது தொடர்கதையாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் : குடிபோதையில் தகராறு செய்தவரின் மனைவி, வன்முறையை தடுத்தபோது நடந்த விபரீதம்..

இந்த நிலையில், வழக்கம் போல் 10-ம் தேதி நேற்று இரவு  குடித்துவிட்டு வந்த குமரவேல்  மனைவி கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் முதலில் வாய் தகராறு ஏற்பட்டு சில மணி நேரங்கள் நீடித்துள்ளது. பின்னர் இந்த தகராறு  கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரம் அடைந்த குமரவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து  முதலில் மனைவி கோமதியின் நெற்றியிலும், கழுத்திலும்  கிழித்ததாக  சொல்லப்படுகிறது. இதில் கோமதி படுகாயமடைந்துள்ளார். சண்டையை தடுக்கச் சென்ற மகள் கையிலும் கத்தியால் லேசாக கிழித்து உள்ளார் குமரவேல். இந்த சண்டை தொடரவே ஒரு கட்டத்திற்கு மேல் பொருத்து கொள்ள முடியாத மனைவி கோமதி கணவன் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கணவன் குமரவேல் பின்பக்க கழுத்து மற்றும் முன்பக்க கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


வேலூர் : குடிபோதையில் தகராறு செய்தவரின் மனைவி, வன்முறையை தடுத்தபோது நடந்த விபரீதம்..

குமரவேல் உயிரிழந்த நிலையில், மனைவி கோமதியும் அவருடைய மகளும் செய்வது அறியாமல் கதறி அழுதுள்ளனர். கதறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, குமரவேல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து வேலூர் தெற்கு காவல்நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த குமரவேலின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சண்டையில் படுகாயம் அடைந்த குமரவேல் மனைவி கோமதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget