மேலும் அறிய

போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்ட பொன்னை ரயில்வே பாலம் - கற்பூரம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்

பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்கள் இருந்ததால் 22 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் வழியே பாயும் பென்னையாற்றின் குறுக்கே உள்ள 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 156 ஆண்டு பழமையான ரயில்வே பாலத்தில் கடந்த 23 ஆம் தேதி மாலை விரிசல் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி அன்று மாலை முதலே அவர் வழியாக இயக்கப்படும் சுமார் 22 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. 
 
பென்னையாற்றின் குறுக்கே உள்ள இந்த ரயில்வே பாலமானது சுமார் 600 மீட்டர் நீளமும், 56 கண்களுடன் கட்டபட்டுள்ளது.பாலத்தில் சேதம் கண்டறியப்பட்டதற்க்கு மறுநாள் 24-ஆம் தேதி காலை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேசன் தலைமையிலான குழுவினர் பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பென்னை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 70 ஆயிரம் கனஅடி வரை பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாலத்தின் 38, 39 ஆகிய தூண்கள் பாதிக்கப்பட்டு விரிசல் அடைந்ததாக கூறியிருந்தார். இருந்தபோதும் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வரும் மூன்று நாட்களுக்குள் பணிகளை முடித்து போக்குவரத்தை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறியிருந்தார்.
 

போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்ட பொன்னை ரயில்வே பாலம் - கற்பூரம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்
 
அதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி முதல்கட்டமாக 39 வது தூணை சுற்றி ஏற்பட்டிருந்த மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில் சுமார் 3 அடி அகலம் 2 அடி ஆழத்திற்கும் கான்கிரீட் அமைப்பை ஏற்படுத்தி பாலத்தை பலப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இரு கண்களுக்கும் இடையிலும் பாலத்திற்கு  துணை கொடுக்கும் வகையில் இரும்பாலான கட்டுமானம் எழுப்பப்பட்டு பாலத்திற்கு துணை கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து விரிசல் கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ளே சிமெண்ட் கலவை செலுத்தப்பட்டு பாலம் பலப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த தொடர் பணி நேற்றிரவு சுமார் 8.30 மணி அளவில் நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து முதல் கட்டமாக ஒரே ஒரு என்ஜினை கொண்டு சீரமைக்கப்பட்ட பாலத்தின் மீது மிக குறைந்த வேகத்தில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த முதல்கட்ட சோதனையின் போது எந்தவித பாதிப்பும் பாலத்திற்கு ஏற்படாமல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. 


போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்ட பொன்னை ரயில்வே பாலம் - கற்பூரம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்
 
இதன் தொடர்ச்சியாக 1050 டன் எடை கொண்ட காலியான ஒரு சரக்கு ரயிலையும், அடுத்தகட்டமாக 2200 டன் எடை கொண்ட சரக்கு ஏற்றிச் செல்லும் மற்றொரு சரக்கு ரயிலையும் தொடர்ச்சியாக பாலத்தின் மீது 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கச் செய்து ஆய்வு செய்தனர் இந்த மூன்று ஆய்விலும் பாலத்திற்கு எந்தவித பாதிப்பும், அதிர்வும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ஊழியர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.  இதற்கு அடுத்தபடியாக இரவு 10.14 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் "மெயில்" எக்ஸ்பிரஸ் ரயிலை பாலத்தின் மீது குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு தற்போது முதல் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
 
போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்ட பொன்னை ரயில்வே பாலம் - கற்பூரம் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஊழியர்கள்
 
சோதனை ஓட்டத்திற்கு முன்பு ஐயர்களை வைத்து சீரமைக்கப்பட்ட பாலத்திற்கு கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து, பூஜை செய்து அதிகாரிகளும் ஊழியர்களும் வழிபட்டனர். பாலத்தில் சேதம் கண்டறியப்பட்ட மறுநாளில் இருந்து சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் நேரடியாக களத்திற்கு வந்து ஆய்வு செய்து தொடர்ச்சியாக மூன்று நாட்களும் சம்பவ இடத்திலிருந்து தனது நேரடிக் கண்காணிப்பில் பணிகளை மேற்கொண்டு விரைந்து இப்பணியை தனது குழுவோடு சேர்ந்து முடித்துள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Embed widget