மேலும் அறிய

Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!

போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசுக்கு பர்வீன் மீது சந்தேகம் எழும்பியது.  

சத்துவாச்சாரியில் ஓய்வுபெற்ற பெல் ஊழியர் வீட்டில் 30 சவரன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டு பணிப்பெண்  உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பிச்சாண்டி வயது (63) இவர் ராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .


Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!

இவரது வீட்டின் 3 போர்ஷன்களிலும், அவரது உறவினர்களே தனித்தனியாக வசித்து வருகின்றனர் . இந்நிலையில் தனது உறவினர் ஒருவரின் , துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக , வயது முதிர்ந்த அவரது சித்தி, சித்தப்பாவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, மீதமுள்ள அனைவரும் கடந்த மாதம் ஜூலை 31-ஆம் தேதி இரவு , வீட்டிலிருந்து புறப்பட்டு துக்க நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளனர். துக்க நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு அடுத்த நாள் காலை 11.30 மணியளவில் திரும்பியுள்ளனர். 

அப்பொழுது பிச்சாண்டி வீட்டின், மர லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த  பிச்சாண்டி இது குறித்து சத்துவாச்சாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 


Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!

போலீஸ் விசாரணையில் பிச்சாண்டி வீட்டில் வேலைசெய்யும் ஆற்காடு நவாப் தெருவை சேர்ந்த அவரது பணிப்பெண் பர்வீன்,  வயது 25 என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது பர்வீன் மற்றும் சத்துவாச்சாரி வள்ளலார் வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்த பானு, வயது 40 ஆகிய இருவரும் நகை மற்றும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். 

மேலும் இன்று காலை சத்துவாச்சாரி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் நகையை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் ஆற்காட்டை சேர்ந்த பர்வீன் கணவருடன் கருத்து மோதல் காரணமாக, சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் பானு வீட்டில் தங்கியுள்ளார். பானுவின் வீட்டில் தங்கியபடியே, பிச்சாண்டி வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிச்சாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை  பயன்படுத்தி வீட்டில் இருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார் பர்வீன்.


Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!

 இதுகுறித்து தனது உறவினரான பானுவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். பானு அளித்த ஆலோசனையின்படி  பர்வீன் வீட்டிலிருந்த 30 சவரன் நகை மற்றும்  பணத்தை  திருடி பானுவிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து எதுவும் தெரியாதது போல் நடித்துள்ளார் . போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசுக்கு பர்வீன் மீது சந்தேகம் எழும்பியது. 5 நாட்களாக பிறருடன் சேர்ந்து தேடுவதுபோல நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பர்வீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  பானு மட்டும் பர்வீன்  கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தனர் .


Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!

வீட்டு உரிமையாளர் வீட்டில் திருடிவிட்டு, அப்பாவிபோல் நடித்து கடந்த 5 நாட்களாக நாடகமாடிய பர்வீன், கைது செய்யப்பட்ட சம்பவம் , இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget