மேலும் அறிய

காட்டுப் பன்றிக்கு வைத்த மின் கம்பியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு - திருப்பத்தூர் அருகே சோகம்

வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்! சட்டவிரோதமா நிலத்தில் மின் வேலி அமைத்த நபர் கைது!..

திருப்பத்தூர் அருகே காட்டுப் பன்றிக்கு வைத்த மின்சார கம்பியால் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக நிலத்தில் மின் வேலி அமைத்த நபரை கைது செய்தனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு காளியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மர்ம நபர்கள் காட்டுப் பன்றியை பிடிக்க மின்சார வேலி அமைத்துள்ளனர். 
 
இந்த நிலையில் நேற்று இரவு பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த லிங்கன் மகன் கரிபிரான் (65) மற்றும் சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் (40) மற்றும் அவருடைய மகன் லோகேஷ் (15) ஆகிய மூன்று பேரும் வனவிலங்குகளை  வேட்டையாட நாட்டு  துப்பாக்கியுடன் பெருமாபட்டு பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளனர்.
 
அப்போது நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி மூன்று நபர்களும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததை அறிந்து குருசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
மேலும் மேலும் குரசிலாப்பட்டு போலீசார் விசாரணையில் முருகன்  என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை காளியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணிய மகன் நீதி (55) என்பவர் காட்டு பன்றியை வேட்டையாட மின் வேலிகளை அமைக்கப்பட்டது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
 
சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்த நீதி என்பவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 
காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget