மேலும் அறிய

நிலத்தகராறு காரணமாக தூங்கி கொண்டிருந்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் கைது

வாணாபுரம் பகுதியில் நிலத்தகராறு முன் விரோத காரணமாக விவசாயி தூங்கிக்கொண்டு இருக்கும்போது சரமாரியாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அடுத்த பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் (60), இவரது மனைவி விக்டோரியம்மாள் (55). இவர்களுக்கு 2 மகன்கள். 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பச்சையப்பனுக்கு அதே கிராமத்தில் சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் இரவில் வீட்டில் உணவு அருந்திய பிறகு தனது நிலத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவார். இதேபோல், இரவு நிலத்திற்கு சென்ற பச்சையப்பன்  காலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி விக்டோரியம்மாள் நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

நிலத்தகராறு காரணமாக தூங்கி கொண்டிருந்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் கைது

அதனை தொடர்ந்து, நிலத்தில் இருந்த கட்டிலில் பச்சையப்பனின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ரத்த காயத்துடன் பச்சையப்பன் மயங்கிய நிலையில் கடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பச்சையப்பன் மனைவி கதறி அழுது உள்ளார். இந்த சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர்கள் உடனடியாக வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், கிராமிய துணைகாவல் கண்காணப்பாளர் அண்ணாதுரை, வாணாபுரம் ஆய்வாளர்  தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் அவரை யாரோ நபர்கள், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அங்குள்ளவர்கள் பச்சையப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நிலத்தகராறு காரணமாக தூங்கி கொண்டிருந்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் கைது

 

இது குறித்து துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் பேசுகையில் 

பச்சையப்பன் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் பேரயாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (50), அவரது மனைவி ஜெயந்தி (40), அன்பழகனின் நண்பர் சுப்பிரமணி (54) ஆகிய 3 பேர் மீது சந்தேகமாக உள்ளது எங்களுக்கும் பக்கத்து நிலத்துரான பூமிநாதனுடன் நிலதகராறு உள்ளது எனவும் கூறியுள்ளார். இதன்  அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினோம். 

விசாரணையில் பச்சையப்பனின் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்கார் பூமிநாதன் என்பவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தை கடந்த 2014ஆம் ஆண்டு பச்சையப்பனுக்கு விற்றுள்ளார். ஆனால், பூமிநாதனின் அண்ணன் அன்பழகன் என்பவருக்கு இதில் உடன்பாடு இல்லையாம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பழகன் அவரது மனைவி ஜெயந்தி, சுப்பிரமணி ஆகிய 3 பேரும் நிலத்துக்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சையப்பனை எழுப்பி, நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

நிலத்தகராறு காரணமாக தூங்கி கொண்டிருந்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் கைது

பின்னர், அந்த துப்பாக்கியை அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக பச்சையப்பனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்தோம் எனக்கூறியுள்ளனர் விசாரணையில், வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அன்பழகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து. பின்னர், அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து குட்டையில் வீசிய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
DRAGON Hero Pradeep: சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
National Award : இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு ? நம்ம போட்டியாளர்கள் இவர்கள்தான்
National Award : இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு ? நம்ம போட்டியாளர்கள் இவர்கள்தான்
Embed widget