மேலும் அறிய

திருவண்ணாமலையில் தொடர் கனமழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் தொடர் கனமழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி...!

மழை அளவு: தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 7 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 70 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 60 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில் அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வானம் மேகமூட்டமாகவும் ஒரு சில இடங்களில் மழைபொழிந்தும் காணப்பட்டது.

மேலும் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல்  பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை  54.00 சென்டி மீட்டர், கலசப்பாக்கம் 159.00 அளவுக்கு விடிய, விடிய கொட்டி தீர்த்தது.  அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக  இரவும் 33.58 மில்லி மீட்டர் மழைபெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் சராசரியின் அளவு 33.08 சென்டிமீட்டர் மழை இடி மின்னலுடனும் பலத்த காற்றுடன் பொழிந்தது 

திருவண்ணாமலையில் தொடர் கனமழை - வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி...!

இந்த மழையால் திருவண்ணாமலை நகரின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வந்தது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. திருவண்ணாமலை அடுத்த நொச்சுமலை, திண்டிவனம் பைபாஸ் சாலை, மற்றும் கிருஷ்ணவேணி நகர் உள்ளிட பகுதியில் வீடுகள் மழை நீரில்  சூழ்ந்துள்ளது அதுமட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வீட்டின் உள்ளே இருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் இந்த பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை  ஏற்பாடுகள் செய்யவேண்டும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget