மேலும் அறிய

திருவண்ணாமலையில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா

’’திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவி கொரோனா தொற்று உறுதி’’

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் கடந்த ஆண்டு மத்திய பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது இதனடிப்படையில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை கருத்துக்கணிப்புகளை நடத்தியது. பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை பள்ளியில் நடத்த உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. 


திருவண்ணாமலையில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா

மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு ஆசிரியர்கள் வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியுடன் அமர வைப்பது, மதிய உணவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.   குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இன்று முதல் 3 நாட்கள் பள்ளி மூடப்பட்டது.

திருவண்ணாமலையில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா

மேலும் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியில் உள்ள அனந்தபுரம் அரசு மேல் நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் கீக்களுர் உயர்நிலைபள்ளியில் பயிலும் மாணவர் மற்றும் கடலாடி மேல் நிலைபள்ளியில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் என 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் இன்று இதுவரை 5 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவும் பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் துப்பரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தபட்டு வருகின்றது என்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருடைய நெருங்கி பழகியவர்கள் அனைவரிடமும் பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
TN Cabinet Reshuffle :
TN Cabinet Reshuffle : "மேயர்களுக்கு அடுத்து அமைச்சர்கள்தான்” நீக்கமா ? மாற்றமா ? பதற்றத்தில் தமிழக கேபினட்..!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Indian 2 : ப்ரோமோஷன் பத்தலையே என்ற நெட்டிசன்கள்... ஆகாயத்தில் இந்தியன் 2 போஸ்டரை பறக்கவிட்ட ஷங்கர்
Indian 2 : ப்ரோமோஷன் பத்தலையே என்ற நெட்டிசன்கள்... ஆகாயத்தில் இந்தியன் 2 போஸ்டரை பறக்கவிட்ட ஷங்கர்
Embed widget