மேலும் அறிய

டெலிகிராம் செயலி மூலம் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 27 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்...!

2003 ஆம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் 5,598 பேர் டெலிகிராம் செயலி மூலம்  நபர் ஒருவருக்கு  தலா 500 ரூபாய் வீதம் திரட்டி அதன் மூலம்  27 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை காவலர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனர்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2003 ஆம் ஆண்டில் தேர்வாகி காவல்துறை பணியில் சேர்ந்த 5600 காவலர்கள்  அனைவரும் ஒன்றிணைந்து "காவலர் உதவும் கரங்கள் 2003 குழு" எனும் சமூக ஊடக குழுவை உருவாக்கி தங்கள் பேட்ஜ் காவலர்களுக்குத் தேவையான உதவிகளை எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் "உதவும் கரங்களாய் உயிர் தருவோம் நாங்கள், நம்பிக்கை நிழலில் ஓய்வெடுங்கள் நீங்கள்" என்ற முழக்கத்துடன் அவர்களது நண்பர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். தற்போது  டெலிகிராம் செயலியில் இவர்கள்  பேட்ஜை சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு புதிய குழுவை உருவாகியுள்ள இவர்கள் வேலூரில்  உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு தாமாக முன்வந்து  27 லட்சத்து 99 ஆயிரம் நிதியை திரட்டி  வழங்கி உள்ளனர். 

டெலிகிராம் செயலி மூலம் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 27 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்...!
 
தொடர்ந்து இது போன்ற உதவிகளைச் செய்துவரும் தமிழ் நாடு  2003 பேட்ஜ் காவலர்களின் உதவும் கரங்கள் குழுவினரின் இந்த செயல்பாடுகள் சக காவலர்கள் மத்தியிலும் காவல் உயர் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (41). இவர் 2003ஆம் ஆண்டு காவலராக பணிக்குச் சேர்ந்து 2008 இல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றார் . தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், வேலூர் சரகத்திற்கு உட்பட்ட பல காவல் நிலையங்களில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர் ,  இறுதியாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கடந்த மே மாதம் 8ஆம் தேதி உயிரிழந்தார். 

டெலிகிராம் செயலி மூலம் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 27 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்...!
 
 
இவரது மனைவி கோமதியும் வேலூரில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இறந்த செல்வராஜுக்கு  9, 7, 6 ஆகிய வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்து 2003 ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் 5598 பேர் டெலிகிராம் செயலி மூலம்  நபர் ஒருவருக்கு  தலா 500 ரூபாய் வீதம் நிதி திரட்டி அதன் மூலம்  27 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயைத் திரட்டியுள்ளனர் . 
 
மேலும் திரட்டப்பட்ட நிதியை அவரது மூன்று பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உதவுவதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய இவர்கள் செல்வராஜின் 3 பெண் பிள்ளைகள் மீது தலா 9 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு LIC நிறுவனத்தில் தனித்தனியாக 3 பிள்ளைகள் மீதும் பாலிசிகளை  (காப்பீடு) எடுத்து அதற்கான ஆவணங்களை மறைந்த காவலரின் மனைவி கோமதியிடம் (புதன்கிழமை) வேலூரில் உள்ள அவரது வீட்டில் வழங்கினர். மேலும் பாலிசி மூலம் கிடைக்கப்பெற்ற முகவர் கமிஷன் 54 ஆயிரத்து 55 ரூபாய் ரொக்க பணத்தையும் கோமதியிடம்  ஒப்படைத்தனர் .
 

டெலிகிராம் செயலி மூலம் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு 27 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்...!
 
ஏற்கனவே சென்னை, மதுரை, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் 2003 பேட்ஜில்  உயிர் இழந்த காவலர் குடும்பங்களுக்கு இதுபோலவே  நிதி திரட்டி உதவி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் பணியில் சேர்ந்த  காவலரின் குடும்பத்திற்கு  2003 பேட்ஜ் காவலர்களின் 'உதவும் கரங்கள் குழு'  தானாக முன்வந்து தொடர்ச்சியாக உதவி செய்துவரும்  செயல்  ஒரு  முன்மாதிரியான செயல் என்று சமூக வலைத்தளங்களில் அனைவரின்  பாராட்டுகளைப்  பெற்று வரலாகப் பேசப்பட்டு வருகின்றது .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget