மேலும் அறிய

புற்றுநோயால் கண் பார்வை போனது..... கருணை கொலை செய்ய கலெக்டருக்கு மனு கொடுத்த மூதாட்டி

மூதாட்டி சின்னகுழந்தைக்கு 2020-ஆம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் புற்றுநோய் கவனிக்காததால் மூதாட்டிக்கு இரண்டு கண்களும் பறிபோனது.

ஆரணியில் புற்று நோயால் கண் பார்வை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சொத்தை ஏமாற்றி அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மூதாட்டியை கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்த தர்மன் இவருடைய மனைவி சின்னகுழந்தை வயது (95). இவர்களுக்கு நடராஜன், ராஜேந்திரன் மற்றும் குமரேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் சில வருடங்களுக்கு முன்பு தர்மேந்திரன் உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் மூதாட்டி சின்னக்குழந்தை மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அதில் சில வருடங்களுக்கு முன்பு குமரேசன் மற்றும் நடராஜன் ஆகிய இரண்டு மகன்களும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் மூதாட்டி சின்னகுழந்தை வசித்து வருகிறார்.அதனைத்தொடர்ந்து மூதாட்டி சின்னகுழந்தைக்கு 2020-ஆம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் புற்றுநோய் கவனிக்காததால் மூதாட்டிக்கு இரண்டு கண்களும் பறிபோனது.

 


புற்றுநோயால் கண் பார்வை போனது..... கருணை கொலை செய்ய கலெக்டருக்கு மனு கொடுத்த மூதாட்டி

இதனால் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்த நடராஜன் என்பவரின் மகனும் மூதாட்டி சின்னகுழந்தை பேரனாகிய கார்த்தி என்பவர் மூதாட்டிக்கு புற்று நோயால் இரண்டு கண் பார்வை இழந்துள்ளதை பயன்படுத்தி மூதாட்டி பெயரில் உள்ள வீட்டின் சொத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அந்த இடத்தை ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். சில மாதங்கள் கழித்து இதனை அறிந்த மூதாட்டி மகன் ராஜேந்திரன் மற்றும்  சின்னகுழந்தை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த மனுவிற்கு இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

 


புற்றுநோயால் கண் பார்வை போனது..... கருணை கொலை செய்ய கலெக்டருக்கு மனு கொடுத்த மூதாட்டி

இதுமட்டுமின்றி தற்போது மூதாட்டியை பராமரித்து வந்த ராஜேந்தினுக்கு போதிய வருமானம் இல்லை என்பதாலும், மூதாட்டி சின்னகுழந்தைக்கு வரும் முதியோர் உதவி தொகை வைத்து தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் பிழைப்பை நடத்தி வருகின்றனர். மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னுடைய சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் அவர்களும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினாலும் கண்பார்வை இழந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் பா. முருகேசுக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆரணியில் புற்றுநோயால் கண்பார்வை இழந்த மூதாட்டியிடம் சொத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget