மேலும் அறிய

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

வேலூர் மத்திய சிறையில்  இருந்து மூன்று நாட்கள்  பரோலில் வந்த கொலைத் தண்டனை கைதி மாயாமாகியுள்ளார் . இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்  .

வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் , பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (27) . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை , அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்  . 


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

 

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பாகாயம் போலீஸார் பின்பு வேல்முருகன்  கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது மீது கொலைவழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில்  அடைத்தனர் . பின்பு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேல்முருகன் , கடந்த 2017 ஆம் ஆண்டு  வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார் .

 இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்று நாட்கள் பொது விடுமுறைக்கு  விண்ணப்பித்திருந்த வேல்முருகனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் மாலை வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது  .


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட வேல்முருகன் நேற்று , திங்கள் மாலை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் . ஆனால்   நேற்று இரவு வரை வேல்முருகன் சிறைக்கு திரும்பாததால் , வேலூர் சிறை  துறை நிர்வாகம் சார்பில் இன்று காலை பாகாயம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது . 

சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள புகாரில்  , மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

 


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

 

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடைய பேசிய , வேலூர் சிறை துறை அதிகாரிகள் , பொது விடுமுறையில்  சென்று தற்பொழுது மாயமாகியுள்ள வேல்முருகன் , ஏற்கனவே பலமுறை பரோலில் வீடு  சென்று உரிய நேரத்தில் சிறைக்கு  திரும்பியுள்ளார் . நேற்று மாலையும்  , தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை சந்தித்துவிட்டு  சிறைக்கு செல்வதாக  தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு , வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில் ,  வேல்முருகன் மாயமாகியிருப்பது பெரும் சந்தித்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

எனவே அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர் .

மருதமலை படத்தில் கைதி ஒருவரை வடிவேலு பரோலில் அழைத்துச் செல்வார். தாயை காணச் செல்லும் அந்த கைதி, அங்கிருந்து கம்பி நீட்டுவார். அது போன்று தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
India New Zealand FTA: வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
India New Zealand FTA: வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
வேலைவாய்ப்பு, முதலீடுகள்; நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன நன்மை.?
Iran China Crude Oil: போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
போருக்கு நடுவே லாபம் ஜோர்.! ஈரானிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்கி கொழிக்கும் சீனா; எப்படி.?
IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!
IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!
சிலிண்டர் தட்டுப்பாடு வருமா? - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் பரபரப்பு
சிலிண்டர் தட்டுப்பாடு வருமா? - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் பரபரப்பு
TN Election Vote Counting : மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget