மேலும் அறிய

தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

வேலூர் மத்திய சிறையில்  இருந்து மூன்று நாட்கள்  பரோலில் வந்த கொலைத் தண்டனை கைதி மாயாமாகியுள்ளார் . இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்  .

வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் , பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (27) . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை , அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்  . 


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

 

இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பாகாயம் போலீஸார் பின்பு வேல்முருகன்  கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது மீது கொலைவழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில்  அடைத்தனர் . பின்பு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேல்முருகன் , கடந்த 2017 ஆம் ஆண்டு  வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார் .

 இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்று நாட்கள் பொது விடுமுறைக்கு  விண்ணப்பித்திருந்த வேல்முருகனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் மாலை வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது  .


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட வேல்முருகன் நேற்று , திங்கள் மாலை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் . ஆனால்   நேற்று இரவு வரை வேல்முருகன் சிறைக்கு திரும்பாததால் , வேலூர் சிறை  துறை நிர்வாகம் சார்பில் இன்று காலை பாகாயம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது . 

சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள புகாரில்  , மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .

 


தாயைப் பார்த்து கதறி அழுகச் சென்ற ஆயுள் தண்டனை கைதி ‛எஸ்கேப்’

 

மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடைய பேசிய , வேலூர் சிறை துறை அதிகாரிகள் , பொது விடுமுறையில்  சென்று தற்பொழுது மாயமாகியுள்ள வேல்முருகன் , ஏற்கனவே பலமுறை பரோலில் வீடு  சென்று உரிய நேரத்தில் சிறைக்கு  திரும்பியுள்ளார் . நேற்று மாலையும்  , தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை சந்தித்துவிட்டு  சிறைக்கு செல்வதாக  தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு , வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில் ,  வேல்முருகன் மாயமாகியிருப்பது பெரும் சந்தித்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

எனவே அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர் .

மருதமலை படத்தில் கைதி ஒருவரை வடிவேலு பரோலில் அழைத்துச் செல்வார். தாயை காணச் செல்லும் அந்த கைதி, அங்கிருந்து கம்பி நீட்டுவார். அது போன்று தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Embed widget