மேலும் அறிய

குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு?; வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு

குடிநீர் குழாய் இணைப்பை ஏற்படுத்தாமல், போலி குழாய் அமைப்பு மட்டும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக இளைஞர் ஒருவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். இளைஞர் மீது வழக்குப் பதிவு.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் ஊராட்சிக்குட்பட்ட இந்திராவனம் கிராமத்தில சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரி வயது (46) என்பவர் இருந்து வருகிறார். இவருடைய மாமனார் ஏழுமலை 65 இவர் ஏற்கனவே தலைவராக பதவி வகித்துள்ளார். தற்பொழுது இவர் அதிமுக வடக்கு மாவட்ட ஒன்றிய துணைச்செயலாளராக உள்ளார். தற்பொழுது அவர்தான் ஆக்டிங் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலராக குப்புசாமி என்பவர் பதவி வகித்து வருகின்றார். மேலும் இந்திரவனம் கிராமத்திற்கு 2022-23 மத்திய அரசின் நிதி குழுவில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இந்திரா கிராமத்தில் உள்ள 110 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் புதிய இணைப்பு குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு  3 லட்சத்து 69 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டது. வீடுகள் முழுவதும் தண்ணீர் குழாய் இணைப்பு பணியை செய்ய டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் பாரதி என்பவர் எடுத்துள்ளார். அதனை சப் கான்ட்ராக்டர் அன்பு என்பவர் பணியை எடுத்து பணியாற்றி வருகிறார். 

 

 

இந்த திட்டத்தின் மூலம் டேங்கிலிருந்து புதிய பைப் லைன் அமைத்து புதியதாக சிமெண்ட் பில்லர் அமைத்து அதில் குடிநீர் குழாய் பொருத்தி தண்ணீர் வீடுதோறும் வருமாறு அமைக்க வேண்டும். ஆனால் இந்த பஞ்சாயத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் டேங்க்கில் இருந்து தெருக்களில் பொதுக் குழாய் அமைக்க பொருத்தப்பட்ட பைப் லைன் மூலமாக இதற்கு முன்பு பஞ்சாயத்திற்கு பணம் கட்டி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பெற்றவர்களின் வீட்டுல் புதியதாக குடிநீர் பைப் வழங்கியது போன்றும், குடிநீர் குழாய் இணைப்பு பெறாதவர்களின் வீட்டில் செட்டாப் பில்லர் 2 அடி நீளமுள்ள குழாய்யை அரை அடி ஆழம் தோண்டி இணைப்பு அமைத்து போன்றும் அதனை புகைப்படங்கள் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி பணம் பெற திட்டுமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அதே கிராமத்தை முரளி என்ற இளைஞர் கிராமத்தில் உள்ள போலியாக இணைக்கப்பட்ட குடிநீர் குழாயை வீடியோ எடுத்து அவருடைய வலைதள பக்கதில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் சேத்பட் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபல் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று புதியதாக குடிநீர் குழாய் இணைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 


குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு?; வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு

 இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்திடம் பேசியபோது; 

அந்த கிராமத்தில் அப்படி முறைகேடு ஏதும் நடக்கவில்லை. இப்போதுதான் பணியை தொடங்கி பைப் லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்காலிகமாக அப்படி வைத்துவிட்டு. அதை பைப் லைன் போடுவதற்காக வைத்துள்ளனர். இப்போதுதான் பைப்லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பதில் கூறினார். மேலும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் இந்திராவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய பைப் லைன் பற்றி தவறான முறையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முரளி மீது நடவடிக்கை எடுக்க கோரி சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget