மேலும் அறிய

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது

வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள செர்லபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (45). தமிழக சிறப்புக் காவல் படை காவலராகச் சென்னையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த 2004  ஆம்  ஆண்டு,  சென்னை காவல்துறை டி.ஐ.ஜி. அலுவலக பணம் 6 லட்சத்தைக் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாகச் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது . 
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு பேரணாம்பட்டு அருகே இளம்பெண் ஒருவரைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 
 
மேலும் கடந்த  2008 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று இவர்  பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை  சிறை சென்றவர் சசிதரன் .
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
இந்நிலையில் முன்னாள் காவலர்  சசிதரன் பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமாருக்குத் தகவல் கிடைத்தது. அவர் வசம் ஒரு நாடு துப்பாக்கி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது. மேலும் அவரை கண்காணித்து நடவடிக்கைஎடுக்குமாறு பேரணாம்பட்டு காவல்துறைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
அதன்பேரில் பேரணாம்பட்டு காவல்துறை ஆய்வாளர் ராஜன் பாபு தலைமையில் போலீசார்  கண்காணித்தபோது செர்லப்பல்லி கிராமத்தில் ஏரிக்கானாறு பகுதியில் முன்னாள் காவலர் சசிதரன் நாட்டுத் துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்றதைக் கண்டுபிடித்து அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சசிதரன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை அருகிலுள்ள பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது.
 

செம்மரக்கடத்தில் ஈடுபட்ட முன்னாள் தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர் கைது
 
அதைத் தொடர்ந்து காவல்துறை அவரது வீட்டைச் சோதனையிட்டதில் வீட்டருகே நிலத்தில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் போலீஸ்காரர் சசிதரன்  மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சசிதரனைக் கைது செய்து குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget