மேலும் அறிய

ஆடி மாதம் அம்மா வீட்டிற்குச் சென்ற மனைவி; அழைத்தும் வராததால் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!

தனது மகளுக்கு திருமணமாகி இதுதான் முதல் ஆடி என்பதால், ஆடிமாதம் முடியாமல் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்க மாட்டோம் என்று மணமகள் வீட்டார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட டாக்டர் மனைவி குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த அரசு நிலஅளவையர், தனது வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் .  மகனின் மரணத்திற்கு பெண்வீட்டார் கொடுத்த மனஅழுத்தம் தான் காரணம் என்று சர்வேயரின் தாய் அளித்த புகாரை தொடர்ந்து , இறந்த சர்வேயரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தார் 5 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரனின் மகன் திலீபன் (33) இவர் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அரசு சர்வேயராக பணியாற்றி வருகிறார் .


ஆடி மாதம் அம்மா வீட்டிற்குச் சென்ற மனைவி; அழைத்தும் வராததால் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!

திலீபனும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மகள் திவ்யா (27) என்பவரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்  . இதில் திவ்யா எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ள திவ்யா புள்ளானேரி பகுதியில் இயங்கி வரும் அம்மா மினி கிளினிக்கில் தற்காலிக மருத்துவராக பணியாற்றி வருகின்றார் .

இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர் . இந்நிலையில் ஆடிமாதம் சனிக்கிழமை பிறப்பதை ஒட்டி , 3 நாட்களுக்கு முன்னதாகவே  வீட்டிற்கு அழைத்துக் கொள்வதற்காக திவ்யாவின் குடும்பத்தார் கடந்த  வாரம் வியாழக்கிழமை அன்றே , திலீபன் வீட்டில் இருந்த திவ்யாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர் .

திலீபனை பிரிந்து தாய்வீட்டில் இருக்க முடியவில்லை என்று திவ்யா தொலைபேசியில் தெரிவிக்கவே , திவ்யாவை அவரது தாய்வீட்டில் இருந்து அழைத்துவர திலீபனின் குடும்பத்தார் கடந்த ஞாயிற்றுக்கிழமை திவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர் . 


ஆடி மாதம் அம்மா வீட்டிற்குச் சென்ற மனைவி; அழைத்தும் வராததால் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!

இதற்கு திவ்யாவின் குடும்பத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர்  , தனது மகளுக்கு திருமணமாகி இதுதான் முதல் ஆடி என்பதால் ஆடிமாதம் முடியாமல் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் .

இதனை தொடர்ந்து இரு வீட்டாருக்கும் தகராறு வெடித்துள்ளது . இதில் திவ்யாவின் குடும்பத்தார் சர்வேயர் திலீபன் மற்றும் அவரது தாய் தமிழ்தேவியை தாக்க முயன்றுள்ளனர் . இதில் மிகுந்த மனவேதனை அடைந்த திலீபன் விரக்தியுடன் இருந்துள்ளார் . நேற்று மாலை திலீபன் அவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

நீண்ட நேரமாகியும் திலீபன் கீழ் தளத்திற்கு வராததால் அவரது குடும்பத்தார் அவரை தேடி மேல்தளத்திற்கு  சென்றுள்ளனர் . அங்கு திலீபனின் சடலம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதை கண்ட திலீபனின் குடும்பத்தார் கதறி அழுத்துள்ளனர் .

அவர்களது கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் . தகவலின்பேரில் விரைந்து வந்த ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் , திலீபனின் பிரேதத்தை மீட்டு , பிரேத பரிசோதைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

மேலும் இன்று காலை திலீபனின் தாயார் தமிழ்தேவி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து , போலீசார் திவ்யா , திவ்யாவின் தந்தை தமிழ்செல்வன் , திவ்யாவின் சகோதரர் , தாய்மாமா மற்றும் சித்தப்பா உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

காதல் திருமணம் செய்து 7  மாதத்திற்குள் சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாமலேரிமுத்தூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget