மேலும் அறிய

Biryani: வேலூரில் பிரியாணி கடை திறப்பு விழாவின் போதே கடையை மூடுவிழாவாக மாற்றிய கலெக்டர்

வேலூரில் பிரியாணி கடை ஒன்றின் திறப்பு விழாவின் போதே மூடு விழா கண்டது. மக்களை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் டென்ஷன் ஆனா மாவட்ட ஆட்சியர் கடைக்கு சீல் வைக்க உத்தரவு.

வேலூர் (Vellore News) வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி-வேலூர் சாலையில் புதியதாக தம்பி என்ற பிரியாணி கடை திறக்கப்பட்டது. தம்பி பிரியாணி கடையில் திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என ஆஃபர் விட்ட நிலையில் காலையில் கடை திறந்ததும் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்தபடியும், கையால் முகத்தை மறைத்தபடியும் காத்திருந்தனர். இதனால், சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 


Biryani: வேலூரில் பிரியாணி கடை திறப்பு விழாவின் போதே கடையை மூடுவிழாவாக மாற்றிய கலெக்டர்

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் கேட்டபோது, பிரியாணி கடை திறப்பு விழாவில் பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் கூடியுள்ளதை தெரிந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் உடனடியாக அங்கு சென்று மக்கள் நீண்ட நேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்ததை அறிந்து கடை உரிமையாளரை அழைத்து மிகவும் கடிந்துகொண்டார். எந்த ஒரு முன்னேற்பாடுகளையும் ஏற்படுத்தாமல் வெயிலில் மக்களை நிற்க வைப்பது என்ன நியாயம் என்றும் மக்களுக்கு பிச்சையா போடுறீங்க காசுக்குதானே விற்பனை பன்றீங்க. அப்படி இருக்கும்போது முறையான முன்னேற்பாடு செய்ய வேண்டாமா என்றும், வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதிபடாதவாறு நிழற்கூடமோ, இருக்கை வசதி எல்லாம் செய்து கொடுக்காமல் இப்படி அவதிப்படுகிறார்கள் என கோபமாக கேட்டார்.


Biryani: வேலூரில் பிரியாணி கடை திறப்பு விழாவின் போதே கடையை மூடுவிழாவாக மாற்றிய கலெக்டர்

பிரியாணி கடை மூடி சீல் வைக்க கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவு 

மேலும் பொதுமக்களை கலைந்து செல்லும் படியும், கடையை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கடையை மூட முயன்றனர். ஆனால் வாடிக்கையாளர்கள் கலைந்து செல்லாமல் கடைக்குள் சென்றுவிட்டனர். பின்னர் அனைவரையும் விரட்டியடித்து காவல்துறையினர் கடையை மூடினர். தொடர்ந்து அங்கிருந்த எஸ்ஐயை அழைத்து இனி இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் எச்சரித்து சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையில், புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்று பெறாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசையுடன் பிரியாணி வாங்க சென்ற பிரியாணி பிரியண்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதில் ஒருசிலர் வருத்தப்பட்டனர், இப்படி செய்தது சரி என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget