மேலும் அறிய

வரதட்சணை தராததால் மனைவியை பிரம்பால் அடித்துவிட்டு முன்னாள் ராணுவ வீரர் ஓட்டம்...!

மேலும் இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை தர வேண்டுமென வலியுறுத்தி தினந்தோறும் துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து இரும்பு பைப் மற்றும் பிரம்பால் தனது மனைவியை அடித்துள்ளார்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை அடுத்த காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர்  ஆறுமுகம் இவரது இளைய மகள் கஜலட்சுமி (30) மற்றும் நாயக்கன் தோப்பு, காவனூர் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அருண் குமாருக்கும் (36) திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 
 
இந்நிலையில் அருண்குமார் தினம்தோறும் வீட்டிற்குக் குடித்துவிட்டு வந்து மனைவி கஜலட்சுமியைத் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின் போது கஜலட்சுமியின் அப்பா ஆறுமுகம் தன் இளைய மகளுக்கு சுமார் 35 பவுன் நகையை வரதட்சணையாகக்  கொடுத்துள்ளார். இந்த  நகை அனைத்தையுமே விற்று அருண்குமார் குடித்துவிட்டதாக  கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அருண்குமார், மதுபோதையில் கஜலட்சுமியைப் பிரம்பு  மற்றும் கையில் கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி வந்துள்ளார் .
 

வரதட்சணை தராததால் மனைவியை பிரம்பால் அடித்துவிட்டு முன்னாள் ராணுவ வீரர் ஓட்டம்...!
 
 
தனக்கு கொடுத்திருந்த வரதட்சணையோடு தனக்கு மேலும் இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை தர வேண்டுமென வலியுறுத்தி தினந்தோறும் துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து இரும்பு பைப் மற்றும் பிரம்பால் தனது மனைவியை அடித்துள்ளார். இதில் கஜலட்சுமி அடி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அவர் உடல் முழுவதும் ரத்தம் சிவந்து  காயங்களுடன் காணப்பட்டது.
 
அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் கஜலட்சுமியின் குடும்பத்தாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில்  ஆற்காட்டுக்கு விரைந்து வந்த குடும்பத்தினர் கஜலட்சுமியைப்  மீட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மனைவி கஜலட்சுமியை அடித்த முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார் தலைமறைவாக உள்ளார். 
 
மேலும் இது தொடர்பாக கஜலட்சுமி மற்றும் அவரது பெற்றோர் அருண்குமார் தனது  மனைவி கஜலட்சுமியை  துன்புறுத்தி அடிப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் ஆற்காடு காவல் நிலைய போலீசார் முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget