மேலும் அறிய

watch video: செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமரின் புகைப்படத்தை அழித்து ‘கோ பேக் மோடி’ வாசகம்

பாஜகவின் செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டிருந்த மோடியின் புகைப்படத்தை கருப்பு ஸ்பிரே கொண்டு அழித்தனர்.

திருவண்ணாமலையில் வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அழித்து  ‘கோ பேக் மோடி’ என்ற வாசகம் எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே ஒலிம்பியாட் குறித்த விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை அழித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் குறித்து தமிழகம் முழுவதும் விளம்பரப் பதாகைகளை தமிழக அரசு ஒட்டி வந்துள்ளது. அந்த வகையில் சென்னை முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ள பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் மோடியின் படம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி விளம்பர பதாகைகளில் மோடியின் புகைப்படத்தை ஒட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

 

 

இந்நிலையில், பாஜகவின் செயலை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அடையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டிருந்த மோடியின் புகைப்படத்தை கருப்பு ஸ்பிரே கொண்டு அழித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் காவல்துறையினர் மோடியின் புகைப்படத்தை அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் இந்த செயல் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்நிலையில் இதேபோன்று திருவண்ணாமலை நகராட்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதும் வகையில் திருவண்ணாமலை- வேலூர்- கிரிவலப்பாதை செல்லும் சாலையின் நடுவில் செஸ் போர்டினை வரையப்பட்டு இருந்தது,

 


watch video: செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமரின் புகைப்படத்தை அழித்து ‘கோ பேக் மோடி’ வாசகம்

 

மேலும் அதன் அருகே தமிழக அரசு சார்பில் அங்கு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தினை திருவண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த ராகவன் என்ற இளைஞர் மார்க்கர் ஸ்கெட்ச் மூலம் அவரின் உருவ படத்தினை அழித்தும், அதன் பின்னர் கோ பேக் மோடி என்ற வாசகத்தையும் எழுதி உள்ளார். மேலும் இவர் செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அதே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தினை வண்ணம் பூச்சு மூலம் புகைப்படத்தினை அழித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் பேசுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட விழிப்புணர்வு பேனரில் இடம் பெற்று இருந்த பாரத பிரதமர் மோடியின் படத்தை அழித்த நபர்கள் யார் என்றும் அந்த வீடியோ வைத்து யார் அவர்கள் என்று ஆய்வு நடத்தி வருகிறோம், கண்டு பிடிக்கப்பட்ட உடனே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget