மேலும் அறிய

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

திருவண்ணாமலை அருகே கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் மாதலம்பாடி கிராமத்தில் உள்ள ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பாலிசி செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் மங்கலம் காவல்நிலைய துணை ஆய்வாளர் நசுருதீன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை பாலிசி போட்டு மாவாக அரைத்தும் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரைஸ்மில்லில் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதில் இரண்டு லோடு வேன்களில் இருந்த ரேஷன் அரிசி மற்றும் ரைஸ்மில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் என சுமார் 15 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 


கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வரப்பட்டு மாதலம்பாடி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் என்ற ரைஸ்மில்லில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை பாலிஷ் செய்தும், அதனை மாவாக அரைத்தும் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்தது தெரிய வந்தது. இந்த ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரைஸ்மில் மேலாளர் சங்கர் வயது (45) மற்றும் அதே கிராமத்தில் வசிக்கும் பரசுராமன் வயது (35), அழகு பாண்டி வயது (23) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டன் கணக்கில் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 7 டன் ரேஷன் அரிசி மட்டுமே பறிமுதல் செய்துள்ளோம் அந்த அரிசி மூட்டைகளை சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்கள் தொடர்பு உள்ளார்களா இவர்கள் எவ்வளவு நாட்களாக ரேஷன் அரிசி கடத்தி வந்துள்ளார்கள் பெங்களூருக்கு ஏற்றுமதி செய்கின்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

 

இந்த நடவடிக்கையில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததாக சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காவல்துறையினரால் கூறப்படுகிறது. ஆனால் சிவில் சப்ளை குடோனில் ஏழு டன் அரிசி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதில் மீதம் உள்ள அரிசி எங்கே போனது என்று கேள்விக்குறியாக உள்ளது. உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இப்படி அலட்சியமாக இருந்தால் ரேஷன் அரிசி கடத்தலை எப்படி தடுக்க முடியும் அத்துடன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் காணாமல் போன 8 டன் ரேஷன் அரிசி குறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில், தனியார் ரைஸ்மில்லில் அரைக்கப்பட்ட ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளதாகவும், கடத்தல் ரேஷன் அரிசியை அரைத்த பிறகு நாங்கள் அதனை பறிமுதல் செய்யமுடியாது அதனால் அங்கேயே விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Embed widget