போராட்டம் அனைத்தும் வீணாகி விட்டதே... ரயிலில் நடந்த சோகம்.. கண்ணீர் விட்ட பயணிகள்
அவருடன் வந்த உறவினர் பதற்றம் அடைந்தார். உடன் ரயிலில் இருந்த மற்ற பயணிகளும் உதவிக்கு வந்தனர். தொடர்ந்து கோமதிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அமர வைத்துள்ளனர்.

திருச்சிrஅய்: போராடியும் காப்பாற்ற முடியவில்லையே என்று ரயில் பயணிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று 15ம் தேரோட்டம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் திருச்சியே திருவிழா கோலம் பூண்டிருந்தது. அந்தவகையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி கோமதி என்பவரும் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேரோட்டத்தில் பங்கேற்று மனநிறைவாக சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நேற்று இரவு திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி ரயில் மூலம் திண்டுக்கலுக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கோமதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவருடன் வந்த உறவினர் பதற்றம் அடைந்தார். உடன் ரயிலில் இருந்த மற்ற பயணிகளும் உதவிக்கு வந்தனர். தொடர்ந்து கோமதிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அமர வைத்துள்ளனர். அவருக்கு தேவையான உதவிகளை உறவினரும் மற்ற ரயில் பயணிகளும் செய்துள்ளனர்.
ரயில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோமதி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினாராம். உடன் இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், அங்கு 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ரயில், மணப்பாறையை அடைந்ததும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் விரைந்து வந்து கோமதியை பரிசோதனை செய்தார். அப்போதுதான் கோமதி ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதனால் கோமதியுடன் வந்த உறவினர் கதறி அழுதுள்ளார். இது மற்ற ரயில் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கோமதியின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இன்டர்சிட்டி ரயில் 25 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் தேரோட்டத்திற்கு உற்சாகமாக புறப்பட்டு வந்த பெண் பக்தர் மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது இறந்த சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

