மேலும் அறிய

தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட வாலிபர் தவித்து வருகிறார். அவரை மீட்க கோரி மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 31). எம்.பி.ஏ. பட்டதாரியான இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 3 வயதில் சாய் துருவேஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வக்குமார் சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினார். இதற்கிடையில் மகன் சாய் துருவேஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இதில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் அதிகம் செலவானது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதிக்க செல்வக்குமார் எண்ணினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒரு ஏஜெண்டு மூலம் துபாய் நாட்டில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலை இருப்பதும், மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிந்தது. இந்த தகவல் மூலம் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கட்டிய பின் கடந்த மே மாதம் 31-ந் தேதி செல்வக்குமார் துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அவரை அந்நிறுவன ஏஜெண்டுகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் படகு மூலம் மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கணினியில் முறைகேடான வேலையை பார்க்க கூறியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வக்குமாரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த கும்பலிடம் செல்வக்குமார் கெஞ்சினார்.


தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதையடுத்து அவரிடம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். மேலும் அதனை உடனடியாக கொடுத்தால் விடுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் செல்வக்குமார் தனது மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டு பேசி நிலைமையை எடுத்துக்கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன ரம்யா செய்வதறியாமல் திகைத்து நகைகளை அடகு வைத்தும், கடனை வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் பணம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்ற பின் செல்வக்குமாரை படகு மூலம் தாய்லாந்துக்கு அழைத்து சென்று விடுவித்துள்ளனர். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த 7 பேரும் பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து அவர்களை பாங்காக் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதற்கிடையில் ரம்யாவிடம் செல்வக்குமார் அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் வீடியோ அழைப்பில் பேசியிருக்கிறார். சமீபத்திலும் அவர் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தனது கணவரை மீட்க கோரி ரம்யா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் அங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வப்போது வீடியோ காலில் பேசுவார். அவருக்கும் எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்குள்ள அரசா? அல்லது வேலைக்கு அழைத்து சென்ற தனியார் நிறுவனத்தினரா? அடைத்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் அங்கிருந்து 13 பேர் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதுபோல எனது கணவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் எனது கணவருக்கு ஏற்பட்ட கொடுமையின் காரணமாக அவர்கள் கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இருப்பினும் 2 மாதங்களுக்கு மேல் ஆனதால் எங்களுக்கு பயமாக உள்ளது. எனது கணவர் அங்கு எப்படி இருக்கிறாரோ? அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
Trichy Power Shutdown: திருச்சியில் நாளை (27-05-2026) பவர்கட் அறிவிப்பு! - எங்கெல்லாம் கரண்ட் இருக்காது?
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
Bengaluru-Trichy Travel : ரூட் கிளியரா இருக்கு பாஸ்! பெங்களூரு - திருச்சி பயணத்தை செம ஈஸியாக்கும் 'சீக்ரெட்' வழித்தடங்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Strikes Iran: யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
யப்பா, மறுபடியும் முதல்ல இருந்தா.! மீண்டும் தொடங்கும் போர்.! ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
MK Stalin:
MK Stalin: "நீங்க சொல்றதை வச்சுதான் நான் முடிவு எடுக்கனும்.." மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Embed widget