மேலும் அறிய

தாய்லாந்திற்கு வேலைக்கு சென்ற கணவனை மீட்டு தாருங்கள்; மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட வாலிபர் தவித்து வருகிறார். அவரை மீட்க கோரி மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 31). எம்.பி.ஏ. பட்டதாரியான இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 3 வயதில் சாய் துருவேஷ் என்ற மகன் உள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வக்குமார் சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பினார். இதற்கிடையில் மகன் சாய் துருவேஷ்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இதில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றில் அதிகம் செலவானது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சம்பாதிக்க செல்வக்குமார் எண்ணினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஒரு ஏஜெண்டு மூலம் துபாய் நாட்டில் கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி வேலை இருப்பதும், மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் எனவும் தெரிந்தது. இந்த தகவல் மூலம் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் கட்டிய பின் கடந்த மே மாதம் 31-ந் தேதி செல்வக்குமார் துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அவரை அந்நிறுவன ஏஜெண்டுகள் அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் படகு மூலம் மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு கணினியில் முறைகேடான வேலையை பார்க்க கூறியிருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வக்குமாரை அங்குள்ளவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த கும்பலிடம் செல்வக்குமார் கெஞ்சினார்.


தாய்லாந்திற்கு  வேலைக்கு சென்ற கணவனை  மீட்டு தாருங்கள்;   மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதையடுத்து அவரிடம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். மேலும் அதனை உடனடியாக கொடுத்தால் விடுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் செல்வக்குமார் தனது மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டு பேசி நிலைமையை எடுத்துக்கூறியிருக்கிறார். இதனால் பதறிப்போன ரம்யா செய்வதறியாமல் திகைத்து நகைகளை அடகு வைத்தும், கடனை வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் பணம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்ற பின் செல்வக்குமாரை படகு மூலம் தாய்லாந்துக்கு அழைத்து சென்று விடுவித்துள்ளனர். அவருடன் கேரள மாநிலத்தை சேர்ந்த 7 பேரும் பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து அவர்களை பாங்காக் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தாய்லாந்திற்கு  வேலைக்கு சென்ற கணவனை  மீட்டு தாருங்கள்;   மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

இதற்கிடையில் ரம்யாவிடம் செல்வக்குமார் அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் வீடியோ அழைப்பில் பேசியிருக்கிறார். சமீபத்திலும் அவர் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தனது கணவரை மீட்க கோரி ரம்யா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் அங்கு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வப்போது வீடியோ காலில் பேசுவார். அவருக்கும் எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்குள்ள அரசா? அல்லது வேலைக்கு அழைத்து சென்ற தனியார் நிறுவனத்தினரா? அடைத்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் அங்கிருந்து 13 பேர் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதுபோல எனது கணவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் எனது கணவருக்கு ஏற்பட்ட கொடுமையின் காரணமாக அவர்கள் கேட்ட பணத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். இருப்பினும் 2 மாதங்களுக்கு மேல் ஆனதால் எங்களுக்கு பயமாக உள்ளது. எனது கணவர் அங்கு எப்படி இருக்கிறாரோ? அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Embed widget