மேலும் அறிய

ஜல்லிக்கட்டு விநாயகரை வாங்க இளைஞர்கள் ஆர்வம்; புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானது ஆகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாக சிறிய கிராமங்களிலும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊரின் முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வர். பின்னர் குறிப்பிட்ட நாளில் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளில் விழா குழுவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மண் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் சதுர்த்தி விழாவிற்கான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்


ஜல்லிக்கட்டு விநாயகரை வாங்க இளைஞர்கள் ஆர்வம்; புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

மேலும், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் மற்றும் நரங்கியப்பட்டு பகுதியில் மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால் தற்போது மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரசாயன கலவைகள் சேர்க்காமல் இயற்கையான முறையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், பாலகணபதி, மங்கள விநாயகர், சிங்க வாகன விநாயகர், சித்தி விநாயகர் என பலவிதமான வடிவங்களில் கலை நுணுக்கத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இப்பகுதியில் செய்யப்படும் மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் சிலை செய்ய ஆர்டர் கொடுத்து சென்று உள்ளனர்.


ஜல்லிக்கட்டு விநாயகரை வாங்க இளைஞர்கள் ஆர்வம்; புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

மேலும், இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கூறுகையில், “பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆன்மிக பணி என்பதாலும், பொதுமக்கள் வணங்கும் தெய்வத்தின் சிலையை வடிவமைப்பதாலும் கடின வேலை என்ற போதும் ஆத்ம திருப்தி உள்ளது. 2 அடி முதல் 10 அடிவரை சிலைகள் செய்யப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விநாயகர் வடிவத்தை இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை சிலைகள் விற்கப்படுகின்றன. முற்றிலும் களிமண்ணை பயன்படுத்தி நீர்நிலைகளை மாசுப்படுத்தாத வண்ணம் சிலைகள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகள் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்த்து உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
லாஸ் ஏஞ்சல்சில் 8,000 ஏக்கரில் பற்றிய புதிய தீ: தவிக்கும் 31,000 பேர்..ரூ.3 லட்சம் கோடி சேதம்.!
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
ஒருபக்கம் நோய் தாக்குதல்... மறுபக்கம் அறுவடை இயந்திர வாடகை உயர்வு: அதிர்ச்சியில் விவசாயிகள்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
Embed widget