மேலும் அறிய

நெருங்கும் கார்த்திகை தீபம் - திருச்சியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்மரம்

திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் பகுதியில் அகல் விளக்கு செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனையும், அழிக்கும் கடவுளான சிவனையும், காக்கும் கடவுளான பெருமாளையும் இந்த மாதத்தில் நாம் வழிபடுவது வழக்கம். அன்றைய நாளில் வீடுகள்தோறும் அழகான வரிசையில் அகல் விளக்குகள் ஏற்றப்படும். அப்போது இரவு பகலாக தெரிவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். இதுபோல் கோயில் பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். கார்த்திகை தீபத்தை கொண்டாட மக்கள் புதிய அகல் விளக்குகளை வருடம்தோரும் வாங்குவர். களிமண்ணால் செய்யப்பட்ட இந்த அகல் விளக்குகளில் பழையது இருந்தாலும், புதிதாக ஒரு சில விளக்குகள் ஆவது வாங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் அகல் விளக்குகள் அதிக அளவில் கார்த்திகை மாதத்தில் விற்பனையாகும். இதற்காக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபடுவர். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்களும் மும்முரமாக விளக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நெருங்கும் கார்த்திகை தீபம் - திருச்சியில்  அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்மரம்

திருச்சி திருவானைக்காவல், நடு கொண்டையம்பேட்டையில், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பருவ மழையால் சில நாட்கள் தடைப்பட்டிருந்தது. தற்போது மழை சற்று ஒய்ந்துள்ளதால் மீண்டும் விளக்கு தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அகல்விளக்கு தயாரிப்பதற்காக முதலில் மண்ணை வெயிலில் உலர்த்துகிறார்கள். அதன்பின்னர் தேவையான தண்ணீர் மற்றும் மணல் கலந்து பக்குவப்படுத்துகிறார்கள். பிறகு அந்த மண்ணை மின்சாரத்தில் சுற்றும் இயந்திரத்தில் இட்டு, ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் வடிவமைக்கிறார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர். இந்த கார்த்திகை பல விதவிதமான விளக்குகளை தயாரித்து வருவதாக தெரிவித்தார் மண்பாண்ட தொழிலாளி.


நெருங்கும் கார்த்திகை தீபம் - திருச்சியில்  அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்மரம்

மேலும், மேஜிக் விளக்குகள், தேங்காய் விளக்குகள், பல முக விளக்குகள், இரண்டு அடுக்கு விளக்குகள் அதாவது கீழே உள்ள அடுக்கில் தண்ணீர் மற்றும் பூக்களும் மேலே உள்ள அடுக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றும் வகையில் உள்ள விளக்குகளும் இந்த ஆண்டு புதிய வரவுகள் ஆகும். இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றனர். தொடர்ந்து பேசிய தொழிலாளர்கள் கடந்த கொரோனா காலங்களில் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கபட்டது. அதனால் வாழ்கையை ஓட்டுவதே மிக சிரமமாக இருந்தது. அதில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம் என வருத்ததுடன் கூறினார்கள். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருநாளில் மண்பாண்ட தொழிலாளர் தயாரிக்கும் விளக்குகளை வாங்கி பண்டிகையை கொண்டாடினால் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget