மேலும் அறிய

‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!

'ரவுடி ‘கொம்பன்’ ஜெகனை போலீசார் தற்காப்புக்காக சுட்டுக் கொன்றாலும் திருச்சி மாவட்டத்தில் ஆட்டம் போட்டு வரும் மற்ற ரவுடிகளுக்கு ‘சாவு பயத்தை’ காட்டியிருக்கிறது திருச்சி மாவட்ட காவல்துறை’ திருந்துங்க

திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பொறுப்பேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ். பதவியேற்றதும் அவர் செய்த முதல் காரியம் பொதுமக்கள் எந்த தயக்கமும் இன்றி நேரடியாக எஸ்.பியை தொடர்புகொண்டு புகார் கொடுக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்ததுதான்.

வருண்குமார் ஐ.பி.எஸ்
வருண்குமார் ஐ.பி.எஸ்

புகார்களை நேரடி கண்காணிப்பில் வைத்திருந்த வருண்குமார்

அவர் நம்பர் கொடுத்த முதல் நாளில் இருந்து வருண்குமாருக்கு வந்தது தொடர் அழைப்புகள். கள்ளச்சாரயம், கட்டபஞ்சாயத்து, விபச்சாரம், ரவுடியிசம் என போன் வர வர அந்த பிரச்னைகளுக்கு மாவட்ட போலீசார் மூலமாக உடனுக்குடன் தீர்வு கண்டார் அவர். ஒவ்வொரு புகாரையும் வழக்கு விசாரணை முடியும் வரை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் வருண்குமார். அதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத செயல்கள் கடந்த 2 மாதங்களில் பெரும் அளவு குறையத் தொடங்கின.‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!

களத்தில் இறங்கி பணி செய்யும் எஸ்.பி. வருண்குமார் - பொதுமக்கள் பாராட்டு

சைரன் வைத்த காரில் அலுவலகம் வந்துவிட்டு அங்கிருந்தே பணிகளை பார்த்துச் செல்லும் பாணிக்கு பதில், வழக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தானே நேரடியாக விசிட் அடித்து வழக்கை துரித்தப்படுத்தும் முயற்சியை எடுத்தார் வருண்குமார். நள்ளிரவில் கூட திருச்சி மாவட்ட காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடிப்படையாக வைத்து, அவரே நேரடியாக காடுகளுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார். கிராமங்களின் தெருக்களுக்கு சென்று மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கினார். அவர் கொடுத்த எண்ணுக்கு ஒரு சின்ன புகார் வந்தாலும் அதனை விசாரிக்க மாவட்ட எஸ்.பியே களத்தில் இறங்கிப்போனதை பார்த்த சக போலீசார் ஆடித்தான் போனார்கள்.‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!

எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை - குற்றங்கள் குறையத் தொடங்கின

திருச்சி எஸ்.பி-யாக வருண்குமார் பதவியேற்ற பின்னர் அவரின் எண்ணுக்கு பெருமளவில் வந்த புகார்கள் இந்த 2, 3 மாதங்களில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, விபச்சாரம் போன்ற சட்ட விரோத செயல்கள் பெருமளவில் தடுக்கப்பட்டன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பஞ்சாயத்தும் ரவுடியிசமும், வியாபாரிகளை மிரட்டுவதும் நடந்துகொண்டே இருந்தது.‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!

திருந்தாத கொம்பன் - முடிந்த வாழ்க்கை

போலீசாரே நெருங்க முடியாத அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் சில ரவுடிகள் அட்டாகாசம் செய்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் கொம்பன் என்ற ரவுடி ஜெகன். பல முறை போலீசார் அவரை கைது செய்து எச்சரித்தபோதும், தன்னுடைய கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசத்தை ஜெகன் கைவிடவில்லை.. திருந்தி வாழ்வதாக எழுதி கொடுத்த பின்னரும் திரைமறைவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதை கண்காணித்த போலீசார் திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு தகவல் கொடுக்கின்றனர். எஸ்..பி வருண்குமார் உத்தரவின்பேரில் தொடர் கண்காணிப்பில் இருந்த கொம்பன் ஜெகன், சின்ன சின்ன கடைகளை கூட விட்டுவைக்காமல், அவர்களிடமும் அடாவடியாக தன்னுடைய ஆட்கள் மூலம் மாமுல் வசூலித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குவாரிகள் நடத்துவோரையெல்லாம் மிரட்டி மாதம் மாதம் மாமுல் தரவில்லையென்றால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மிரட்டியுள்ளார். புகாரை பெற்று அவர் மீது சட்ட நடவடிக்கை  எடுக்க காவல்துறை தயார் ஆகி வந்த நிலையில், வேறு ஒரு புகாரை விசாரிக்க சென்ற காவல்துறையினரிடம் ரவுடி ஜெகன் சிக்கி, போலீசாரை தாக்க முயன்றபோது சுடப்பட்டிருக்கிறார்.

'சட்டம் தன் கடமையை செய்யும்’

இது திட்டமிட்ட எண்கவுண்டர் இல்லை என்றும் தங்களுடைய பாதுகாப்பிற்காக போலீசார் சுட்டதாகவும் எஸ்.பி தெரிவித்துள்ள நிலையில், ரவுடி கொம்பன் இறப்பிற்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளுக்கு ‘சாவு பயம்’ வந்திருக்கிறது. ரவுயிசம், கட்ட பஞ்சாயத்து, வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எச்சரித்துள்ளார் திருச்சி எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ்

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget