மேலும் அறிய

திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.12¾ லட்சம் அபராதம் விதிப்பு

திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.12 ¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 1,331 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து வீதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் கீழ் நடைவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அதன் படி திருச்சி மாநகரில் 44 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த 804 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 108 பேர்கள் மீது ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி வந்த 9 பேர்கள் மீது ரூ.9 ஆயிரமும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற 49 பேர்களுக்கு ரூ.49 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.


திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.12¾ லட்சம் அபராதம் விதிப்பு

மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள் 7 பேர்களுக்கு ரூ.35 ஆயிரமும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர்கள் சென்றதில் 72 வழக்குகள் பதிவு செய்து ரூ.72 ஆயிரமும் மற்றும் இதர வாகன விதிமீறல்களில் 266 வழக்குகளுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து விதியை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 1,331 பேர்கள் மீது 1,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திருச்சி மாநகரை பொறுத்தவரை தொடர்ந்து பல இடங்களில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாததே இது போன்ற விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகையால் மாநகரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு விதிமுறைகளை பற்றி பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அதை சரியாக பின்பற்றவில்லை. ஆகையால் தான் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தபட்டது. மேலும் இதுபோன்று வாகன சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget