மேலும் அறிய

திருச்சியில் மக்களை கவரும் வகையில் 2 அடுக்குகளுடன் நடைபயிற்சி ரவுண்டானா

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யக்கொண்டான் வாய்க்காலின் மீது 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் அழகிய ரவுண்டானா அமைக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகர் ,நீதிமன்றம் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து தென்னூர் அண்ணாநகர் பாலம் வரை 780 மீட்டர் தொலைவுக்கு நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பேவர் பிளாக் மூலம் இரு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழி நெடுகிலும், மரங்கள் நன்கு வளர்த்து பசுமையாக இருப்பதாலும், ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் இருப்பதாலும், திறந்தவெளியில் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாலும் நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நடைபாதைக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யக்கொண்டானின் மறுகரையில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தையொட்டிய பகுதியில் ரூ.1.90 கோடியில் கடந்தாண்டு மேலும் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்களை கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளை சிலை, மின் அலங்காரங்களுடன் கூடிய மீன் வடிவலான நீரூற்று, உய்யக்கொண்டான் வாய்க்காலில் படித்துஐற, கவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், அமர்ந்து ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டது.


திருச்சியில் மக்களை கவரும் வகையில் 2 அடுக்குகளுடன் நடைபயிற்சி ரவுண்டானா

இதனை தொடர்ந்து இந்த 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் உய்யக்கொண்டான் வாய்க்காலின் மீது அழகிய ரவுண்டானா அமைக்குமாறு திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், கட்டிட எழில்கலை பொறியாளர்கள் உதவியுடன் தற்போது அதற்கான பூர்வாங்க பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து திருச்சி மாநகராட்சி  மேயர் அன்பழகன் கூறும்போது, "எம்.ஜி.ஆர். சிலை அருகே உய்யக்கொண்டான் வாய்க்கால் மீது தற்போதுள்ள பாலத்தில் இருந்து சுமார்100 மீ தொலைவில் கிழக்கு பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இந்த ரவுண்டானாவின் மையப்பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், வட்டவடிவிலான படிக்கட்டுகள், சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நீருக்கு மேலே 2 அடுக்கு நடைபயிற்சி தளங்களுடன் அமைக்கப்படும் இந்த அழகிய ரவுண்டானா நிச்சயம் பொதுமக்களை கவரும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் நிர்வாக ஒப்புதலுக்கா அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும்" என்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget