மேலும் அறிய

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் இடத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரம்

100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது

தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சியில் இருந்து மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்கும் போக்குவரத்து வசதி உள்ளதால், சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், தனியார் பேருந்துகள் என தினமும் 2,500-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, மாநகரிலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று 1996-ம் ஆண்டு முதலே அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், திருச்சி யில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உட்கட் டமைப்பு மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதன்மூலம் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்ற திருச்சி மக்களின் 25 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் இடத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரம்

இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள், தேவையான அளவிற்கு பேருந்து பாதைகள் மட்டுமல்லாது, எரிபொருள் நிலையம், குளிர்சாதன பொருட்கள் கிட்டங்கி வசதியுடன் கூடிய சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது எனவும்,  திருச்சி மக்கள் தொகை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 11.45 சதவீதம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள நிலையில், அங்கு காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் மிக அதிக மதிப்பிலான திட்டம் இது ஆகும். இந்த பேருந்து முனைய பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையிலான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.


திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் இடத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரம்

இதையடுத்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பஞ்சப்பூர் பகுதியில் செடிகள், முட் புதர்களை அகற்றும் பணியும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள கைவிடப்பட்ட கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளை இடித்து அந்த இடத்தை சமன்படுத்தும் பணியும் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது,  ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை சுத்தப் படுத்தி, சமன்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது பேருந்து நிலையத்துக்கான இடத்தை எளிமையாக பார்வையிடும் நோக்கில் இந்தப்பணி மேற்கொள் ளப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மணிப்பூரில் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்?  இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
18 ஆண்டு தவம்... இங்கிலாந்து தொடரை வெல்வாரா கில்? இதற்கு முன்னர் வென்ற கேப்டன்கள் யார்?
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
Embed widget