மேலும் அறிய

திருச்சியில் 2023ம் ஆண்டு 10% சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது - காவல் ஆணையர் காமினி

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

இந்தாண்டு 35-வது தேசிய சாலை பாதுக்காப்பு வாரம் 11.01.24 முதல்  17.01.24  வரை  கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி, நாடகங்கள், பிரசாரங்கள் நடத்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி,  கோட்டை காவல் நிலைய சரகத்தில் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டது இவ்விழாவினை துவக்கி வைத்து பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி,  திருச்சி மாநகர பொதுமக்களில் கல்லூரி மாணவர்கள் அதிகம் உள்ளதாகவும், இதில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் விழிப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்லுமாறும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டு, தங்களது விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதாகவும், வாகன ஒட்டிகள் தங்களது உயிரை காத்து கொள்வதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை காக்காவும், சாலை விதிமுறைகளை தவறாது பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும், மாநகரத்தில் விபத்துக்களை அறவே ஒழிக்க திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்கள். பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும் வழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


திருச்சியில் 2023ம் ஆண்டு 10% சாலை  விபத்துகள் அதிகரித்துள்ளது - காவல் ஆணையர் காமினி

மேலும், இவ்விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மௌன மொழி நாடகம் (MIME) நடத்தி காண்பிக்கபட்டது. அதனை தொடர்ந்து பிஷப் ஹீபர் பள்ளி, புனித வளனார் பள்ளி, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணாக்கர்கள் என 200 நபர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சத்திரம் பேருந்து நிலையம் ரகுநாத் ஹோட்டல் அருகில் துவங்கி, அண்ணாசிலை, பெரியசாமி டவர் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் ரகுநாத் ஹோட்டல் அருகில் முடிவடைந்தது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துக்கொண்டார்கள். இப்பேரணியில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மண்டலம், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.


திருச்சியில் 2023ம் ஆண்டு 10% சாலை  விபத்துகள் அதிகரித்துள்ளது - காவல் ஆணையர் காமினி

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி பேசியதாவது: திருச்சி மாநகர பகுதிகளில் விபத்துகளை குறைக்க காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது அந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி விபத்துகளை தடுப்பது காவல்துறையின் நோக்கம் என்றார். திருச்சி மாநகரில் சென்ற வருடம் 158 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது அதில் 165 பேர் உயிரிழந்துள்ளார்கள் இதன் மூலம் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டு 10% அதிகமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக அதிக விபத்து ஏற்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் அதி வேகமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் இருப்பினும் அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக மாணவர்கள் பின்பற்றி விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
Embed widget