மேலும் அறிய

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் எப்போது திறப்பு? - அதிகாரிகள் கூறிய தகவல்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தகவல்

திருச்சியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாட்டின் மையப்பகுதியாக திகழக்கூடியது திருச்சி ஆகும். திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கமும், வாகனங்களின் பெருக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. அதே சமயம் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் திருச்சி மாநகரைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் பகுதி, மத்திய பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுக்கடங்காமல் ஏற்படுகிறது. ஆகையால் இவற்றிற்கு தீர்வு காண வேண்டுமென மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவும் பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தினர்.

இத்திட்ட முழுமையாக முடிவடைந்தால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதே இருக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம் முழுமைபெற்றால் சென்னைக்கு நிகரான மாநகரமாக திருச்சி திகழும் என்பதில் சந்தேகம் இல்லை என்றனர்.


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் எப்போது திறப்பு? - அதிகாரிகள் கூறிய தகவல்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

இதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய பஞ்சப்பூர் என்ற பகுதியில் சுமார் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியும், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகனம் முனையம் மற்றும் சாலைகள் மேம்படுத்துதல், பறக்கும் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் அனைத்து பணிகளுக்கும் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சுமார் 40.60 ஏக்கர் மொத்த பரப்பளவில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வாரம்தோறும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். தரமானதாக இருக்க வேண்டும் குறைகள் சொல்லும் அளவிற்கு பணிகள் நடைபெறக்கூடாது அறிவுரை வழங்கி வந்தனர்.

இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 124 புறநகர் பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், 142 நீண்ட நேர பேருந்துகளை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் 78 குறைந்த நேர நிறுத்த தடங்கள் என மொத்தம் சேர்த்து 404 பேருந்து நிறுத்தம் தடங்கள் அமைக்கபட்டுள்ளது. மேலும்  60 நகர பேருந்து நிறுத்த இடங்களும், 70 கடைகள் என பிரம்மாண்டமாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் எப்போது திறப்பு? - அதிகாரிகள் கூறிய தகவல்

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் சோதனை ஓட்டம்

குறிப்பாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஆனது இரண்டு அடுக்குகளை கொண்டது போல் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  இதில் முதல் தளம் அமைக்கும் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் புகைப்படங்கள் அனைத்து சமூக வலைதளங்களும் வைரலாகி வந்தது.

மேலும் பேருந்து முனையத்தில் தற்போது 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பேருந்து முனையத்தை இரண்டு பகுதிகளாக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் இல்லாமல், பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்த பின்னர் திறக்க வேண்டும் என கூறியதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பணிகள் அனைத்தையும், தரமாகவும், உறுதியாகவும் விரைந்து முடிப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு தனியார் பேருந்து வைத்து சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். இந்த புகைபடமும் சமூக வலையதலங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தாண்டு திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கபடும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget