மேலும் அறிய

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை - திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களின் பணிபுரியும் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். குற்றங்கள் எதுவும் நடக்காமல் நடவடிக்கையை உடனுக்குடன் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். குறிப்பாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள்,  பெண்கள் ஆகியோர்களை குறி வைத்து சிலர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

ஆகையால் அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்கள் மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்.  அதே சமயம் சந்தேகப்படும்படி அப்பகுதிகளில் சுற்றித் திரியும் நபர்களை உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் குற்றங்கள் குறித்து மக்கள் தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்

மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் பாலியல் புகார்கள் வராத வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பாலியல் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுனையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பாலியல் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பெத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகள் கவிதா இவர்  (மனநிலை பாதிக்கப்பட்டவர்) . இவரை  கடந்த 2019 ஆண்டு  தனது வீட்டில் தனியாக இருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த திருமலை மகன் விஜயன் என்பவர் காவிதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கவிதாவிடம் கட்டாய பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.


மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கவிதாவின் சகோதரி சந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை போலீசார் மேற்க்கொண்டனர். பின்பு  புகார் உண்மை என தெரிந்ததும் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

திருச்சி மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற விசாரணை இறுதியில்  விஜயன் என்பவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், குற்றவாளி விஜயனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget