மேலும் அறிய

குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை - நாடகமாடிய தாய் கைது

திருச்சி மாவட்டம் , லால்குடி அருகே பிறந்த குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்று நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). இதேபோல் லால்குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (42). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி (38). பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இந்த அலுவலகத்துக்கு ஜானகி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன் மூலம் ஜானகிக்கும், பிரபுவுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜானகி திருமணமாகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஜானகி, கருவை கலைக்க வக்கீல் பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை அணுகினார். இதனையடுத்து அவர்கள் குழந்தை பிறந்ததும், அதனை விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, குழந்தையை பிரபுவிடம் ஒப்படைத்தார். பிரபு குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒருவரிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரபு ரூ.1 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை செய்ததாகவும், அதில் தான் ரூ.20 ஆயிரத்தை எடுத்து கொண்டதாக தெரிவித்து, ஜானகியிடம் ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.


குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை -  நாடகமாடிய தாய் கைது

இதனை தொடர்ந்து பணத்தை பெற்றுக் கொண்ட ஜானகி நகைகளை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்கிடையில் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் விற்றது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி குழந்தையை விற்ற தகவலை போலீசிடம் தெரிவிக்காமல் குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன்பின் காணாமல் போய்விட்டதாகவும், எனவே குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரியும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் புகார் கொடுத்த ஜானகி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஜானகியின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபு, அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. மேலும் ஜானகி குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியை கைது செய்தனர். மேலும் குழந்தை யாரிடம் விற்கப்பட்டது. குழந்தை விற்பனையில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chinnaswamy stampede: 11 பேரின் உயிரை பறித்த கூட்ட நெரிசல் - ஆர்சிபி கேங்கை தூக்கிய பெங்களூரு போலீஸ், அப்ப அடுத்து?
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது -  IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
Embed widget