மேலும் அறிய

திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

காரில் கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவல்துறை.. அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை, விற்பனை அதிகரித்து வருகிறது.குறிப்பாக  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, போன்ற பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 10 முதல் 15  கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ராம்ஜிநகரில்  அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் 8 பேர் கொண்ட குழு தனிப்படை அமைத்து  அந்த பகுதி முழுவதும் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகர் பொருத்தவரை பல இடங்களில் இரு சக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது .ஆகையால் மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 முதல் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த மத்திய மண்டல காவல்துறை  ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அனைத்தும் மண்டலத்திலும் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் சோதனை செய்ததில் கஞ்சா, விற்பனை செய்ததாக  25-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

க்இந்த நிலையில்  தனிப்படை காவல்துறையினர்  தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது கொண்டிருக்கும் தொலைபேசி மூலமாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி- மன்னார்புரத்தில் காவல்துறையினர்  வாகன சோதனை நடத்தினர். அப்போது விமான நிலையம் பகுதியிலிருந்து முகமது ஹனீபா என்பவர் ஓட்டி வந்த காரை, சோதனையிட நிறுத்தியபோது, கார் நிற்காமல் விரைந்து சென்றது. உடனே  தனிப்படை காவல்துறையினர்  விடாமல் விரட்டிச் சென்றனர். இந்த கார் சென்னை 4 வழிச் சாலையில் சென்னையை நோக்கி பறந்தது. அப்போது செந்தண்ணீர்புரம் பகுதியில் கார் சென்ற போது பைக்கில் விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், பைக்கில் இருந்து காரைப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.


திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

ஆனால் நிற்காமல் சென்றது கார். பின்னர் காரில் தொற்றிய படியும் முன்பக்கத்தில் படுத்தபடியும் சென்று, காரின் ஸ்டியரிங்கை திருப்பி, சாலையோர தடுப்பு சுவரில் மோத வைத்தார். இதையடுத்து கார் நின்றது. அப்போது காரின் முன்பக்கம் தொற்றிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் தூக்கி வீசப்பட்டார். பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார், சாமர்த்தியமாக காரை ஓட்டி வந்த முகமது ஹனீபாவை மடக்கிப் பிடித்தனர்.  

காரிலிருந்து சுமார் 21  கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். உயிரைப் பணயம் வைத்து காரை விரட்டிச்சென்ற தலைமைக் காவலர் சரவணன், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு  சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நலமுடன் உள்ள என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து  காரை விரட்டி சென்ற தலைமைக் காவலர் சரவணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்  தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து  விசாரித்த பிறகு பாராட்டுக்களை டிஜிபி C. சைலேந்திர பாபு, தெரிவித்தார். மேலும் இவரது வீரச் செயலை பாராட்டி ரூபாய் 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி காவல்துறை ஆணையருக்கு,  காவல்துறைத் தலைமை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget