மேலும் அறிய

திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

காரில் கஞ்சா கடத்திய நபரை மடக்கிப் பிடித்த காவல்துறை.. அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை, விற்பனை அதிகரித்து வருகிறது.குறிப்பாக  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, போன்ற பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 10 முதல் 15  கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ராம்ஜிநகரில்  அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் 8 பேர் கொண்ட குழு தனிப்படை அமைத்து  அந்த பகுதி முழுவதும் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருச்சி மாநகர் பொருத்தவரை பல இடங்களில் இரு சக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது .ஆகையால் மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 முதல் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த மத்திய மண்டல காவல்துறை  ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அனைத்தும் மண்டலத்திலும் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் சோதனை செய்ததில் கஞ்சா, விற்பனை செய்ததாக  25-க்கும் மேற்பட்டோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

க்இந்த நிலையில்  தனிப்படை காவல்துறையினர்  தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது கொண்டிருக்கும் தொலைபேசி மூலமாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி- மன்னார்புரத்தில் காவல்துறையினர்  வாகன சோதனை நடத்தினர். அப்போது விமான நிலையம் பகுதியிலிருந்து முகமது ஹனீபா என்பவர் ஓட்டி வந்த காரை, சோதனையிட நிறுத்தியபோது, கார் நிற்காமல் விரைந்து சென்றது. உடனே  தனிப்படை காவல்துறையினர்  விடாமல் விரட்டிச் சென்றனர். இந்த கார் சென்னை 4 வழிச் சாலையில் சென்னையை நோக்கி பறந்தது. அப்போது செந்தண்ணீர்புரம் பகுதியில் கார் சென்ற போது பைக்கில் விரட்டிச் சென்ற தலைமைக் காவலர் சரவணன், பைக்கில் இருந்து காரைப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.


திருச்சி : உயிரை பணயம் வைத்த தீரம் : தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு!

ஆனால் நிற்காமல் சென்றது கார். பின்னர் காரில் தொற்றிய படியும் முன்பக்கத்தில் படுத்தபடியும் சென்று, காரின் ஸ்டியரிங்கை திருப்பி, சாலையோர தடுப்பு சுவரில் மோத வைத்தார். இதையடுத்து கார் நின்றது. அப்போது காரின் முன்பக்கம் தொற்றிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் சரவணன் தூக்கி வீசப்பட்டார். பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீசார், சாமர்த்தியமாக காரை ஓட்டி வந்த முகமது ஹனீபாவை மடக்கிப் பிடித்தனர்.  

காரிலிருந்து சுமார் 21  கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர். உயிரைப் பணயம் வைத்து காரை விரட்டிச்சென்ற தலைமைக் காவலர் சரவணன், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு  சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நலமுடன் உள்ள என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து  காரை விரட்டி சென்ற தலைமைக் காவலர் சரவணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்  தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து  விசாரித்த பிறகு பாராட்டுக்களை டிஜிபி C. சைலேந்திர பாபு, தெரிவித்தார். மேலும் இவரது வீரச் செயலை பாராட்டி ரூபாய் 25 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார். தலைமைக் காவலர் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க திருச்சி காவல்துறை ஆணையருக்கு,  காவல்துறைத் தலைமை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget